விஜயநகர் அரசு
சங்கம மரபினர் சைவர்களாகத்திகழ்ந்தனர். விருப்பாட்ஷர் அவர்களின் குலதெய்வம். மற்ற மரபைச் சேர்ந்தவர்கள் வைணவர்கள். ராமானுஜரின் ஸ்ரீவைணவம் மக்களிடையே புகழ்பெற்று விளங்கியது. ஆனால் எல்லா அரசர்களும் பிற சமயங்கள் மீது சகிப்புத் தன்மையுடன் நடந்து கொண்டனர். மக்கள் அனைவரும் சமய சுதந்திரம் உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் பெற்றுத்திகழ்ந்தனர் என போர்போசா குறிப்பிட்டுள்ளார். நிர்வாகத்தில் முஸ்லிம்களும் இடம்பெற்றிருந்தனர். மசூதிகள் கட்டிக்கொண்டு தொழுகை நடத்தவும் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். பல்வேறு விழாக்கள் நடைபெற்றன. இதிகாசங்களும் புராணங்களும் மக்களிடையே பிரபலமாக இருந்தன.
மகளிர் நிலையில் முன்னேற்றம் காணப்படவில்லை. ஒரு சிலர் மட்டுமே கல்வியிற்சிறந்து விளங்கினர். குமார காம்பணரின் மனைவி கங்கா தேவி மதுராவிஜயம் என்ற நூலை எழுதினார். ஹன்னம்மா, திருமலம்மா இருவரும் அக்காலத்தில் புகழ் வாய்ந்த பெண்புலவர்கள்.
ஏராளமான பெண்கள் அரண்மனைகளில் பணிப்பெண்களாகவும் நாட்டிய மகளிராகவும், பல்லக்கு சுமப்பவர்களாகவும் இருந்தனர் என நூனிஸ் கூறுகிறார். ஆலயங்களுக்கு சேவை செய்த நாட்டிய மகளிரும் இருந்தனர். தேவதாசி முறை வழக்கத்திளிருந்ததாக பயஸ் குறிப்பிட்டுள்ளார். அரச குடும்பங்களில் பல தாரமணம் வழக்கத்திலிருந்தது. 'சதி' வழக்கம் பெருமையாகக் கருதப்பட்டது. நூனிஸ் அதுபற்றி விவரமாகக் கூறியுள்ளார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
விஜயநகர் அரசு , வரலாறு, இந்திய, விஜயநகர், மக்கள், குறிப்பிட்டுள்ளார், அரசு, இருந்தனர், நூனிஸ், நாட்டிய, பயஸ், இந்தியா, கூறியுள்ளார், மக்களிடையே