இந்திய சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்
பெரியார் ஈ.வெ. ராமசாமி ஒரு சிறந்த சீர்திருத்தவாதியாவார், 1921 கள்ளுக்கடை மறியலின்போது, தன் சொந்தத் தோப்பிலேயே 1000 தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார். 1924ல் அவர் வைக்கம் அறப்போராட்டத்தில் கலந்து கொண்டார். கேரளாவில் வைக்கம் என்ற இடத்தில் ஆலயத்துக்கு அருகில் இருந்த சாலையில் தீண்டத்தகாதவர்கள் நடந்து செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை எதிர்த்து இந்த போராட்டம் நடத்தப்பட்டது. வ.வே.சு ஐயரின் சேரன் மாதேவி குருகுலத்தின் வருணாசிரம நடவடிக்கையை அவர் எதிர்த்தார். 1920 முதல் 1925 வரை பெரியார் காங்கிரசில் இருந்து கொண்டே வகுப்புவாரி பிரதிநிதித்துவக் கொள்கையைக் காங்கிரஸ் ஏற்க வேண்டும் என வலியுறுத்தினார்.
பெரியார் ஈ.வெ. ராமசாமி |
பெரியாரின் அரும்பணியைப் பாராட்டி தமிழ்நாடு பெண்கள் மாநாட்டில் 1938 ஆம் ஆண்டு ஈ.வே.ராவுக்கு "பெரியார்". பட்டம் வழங்கப்பட்டது. 27-06௧970 ஆம் ஆண்டு ஐ.நா.வின் யுனெஸ்கோ நிறுவனம் - தந்தை பெரியாரை 'தெற்கு ஆசியாவின் சாக்ரடிஸ்' என பாராட்டி போற்றியது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்திய சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் , இந்திய, அவர், பெரியார், வரலாறு, சுயமரியாதை, சமூக, இயக்கங்கள், சீர்திருத்த, திருமணம், கடுமையாக, திருமணங்களை, பாராட்டி, ஆண்டு, ராமசாமி, இந்தியா, வைக்கம், எதிர்த்தார், இந்து