');
if (iCwidth > 336) {
document.write('');
}else if(iCwidth <=336 && iCwidth >= 0 ){
document.write('');
}
document.write('');
//-->
நீதிக்கட்சியின் முன்னோடி சென்னை ஐக்கிய கழகமாகும். இது 1912 நவம்பர் மாதத்தில் சென்னை திராவிட சங்கம் என்று பெயர் மாற்றம் பெற்றது. இந்த அமைப்பை வளர்ப்பதற்கு டாக்டர் சி. நடேச முதலியார் முக்கிய பங்காற்றினார். 1916 ஆம் ஆண்டு பிராமணர் அல்லாத ஜாதி இந்துக்களின் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக "தென்னிந்திய நல உரிமைச் சங்கம்" தோற்றுவிக்கப்பட்டது. பிட்டி தியாகராய செட்டி, டாக்டர் டி.எம். நாயர், பி. ராமராய நிங்கர் (பனகல் அரசர்) மற்றும் சி. நடேச முதலியார் போன்ற தலைவர்கள் இந்த அமைப்பு உருவாகக் காரணமாக இருந்தனர். தென்னிந்திய நல உரிமைச்சங்கம் "ஜஸ்டிஸ்" (நீதி) என்ற பெயரில் ஒரு ஆங்கில மொழி செய்தித்தாளை நடத்தி வந்தது. இதனால் இந்த அமைப்பு நீதிக்கட்சி என்றே அழைக்கப்பட்டது. நீதிக்கட்சியை ஆதரித்த மற்றொரு தமிழ்ப் பத்திரிகை திராவிடன் ஆகும். மேலும் ஜஸ்டிஸ் கட்சி பல பொதுக்கூட்டங்கள், மாநாடுகள், சொற்பொழிவுகள் வாயிலாக பிராமணர் அல்லாதோர் இயக்கத்தை மக்களிடையே பரப்பியது அது போலவே ஜஸ்டிஸ் கட்சி மாவட்ட அமைப்புகளை உருவாக்கியது. மற்றும் பிராமணர் அல்லாத இளைஞர் அணியை தோற்றுவித்தது.
நீதிக்கட்சியின் ஆட்சி
 |
பிட்டி தியாகராய செட்டி |
மாண்டேகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட 1920 ஆம் ஆண்டு தேர்தல்களில் வெற்றி பெற்று நீதிகட்சி ஆட்சிக்கு வந்தது. சென்னை சட்ட சபையில் 98ல் 63 இடங்களில் நீதிக்கட்சி வெற்றி பெற்றது. பிட்டி தியாகராய செட்டி அமைச்சரவைக்கு தலைமையேற்க மறுத்துவிட்டதால், ஏ. சுப்பராயலு ரெட்டியார் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது. 1923 ஆண்டு தேர்தலில் நீதிக்கட்சி சுயராஜ்ய கட்சியை எதிர்த்து போட்டியிட்டது. மீண்டும் பெரும்பான்மை இடங்களைப்பிடித்த நீதிக்கட்சி பனகல் அரசர் தலைமையின்கீழ் அமைச்சரவையை அமைத்தது. 1926 ஆம் ஆண்டு தேர்தலில் நீதிக்கட்சியில் ஒற்றுமை குலைந்ததால் ஒட்டுமொத்த காங்கிரசை எதிர்த்து பெரும்பான்மை பெறமுடியவில்லை. எனவே சுயேச்சை வேட்பாளர் ஏ. சுப்பராயன் தலைமையிலான அமைச்சரவை சுயராஜ்ய கட்சியின் ஆதரவுடன் பதவிக்கு வந்தது. 1930 ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் நீதிக்கட்சி பெரும்பான்மை பெற்றது. பி. முனுசாமி நாயுடு தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது. 1932ல் பொப்பிலி அரசர் தலைமை அமைச்சரானார். 1934ல் இரண்டாவது முறையாக பொப்பிலி அரசர் அமைச்சரவைக்கு தலைமையேற்றார். 1337 ஆம் ஆண்டுவரை அவரது ஆட்சி தொடர்ந்தது.
');
if (iCwidth > 336) {
document.write('');
}else if(iCwidth <=336 && iCwidth >= 0 ){
document.write('');
}
document.write('');
//-->