இந்திய தேசிய இயக்கம் (1885 - 1905)
பிரம்ம சமாஜம், இராமகிருஷ்ண இயக்கம், ஆரிய சமாஜம், பிரம்ம ஞான சபை போன்ற அமைப்புகள் தாய்நாட்டின் பெருமைகளை மக்களிடையே எடுத்துரைத்து நாட்டுப்பற்று குறித்த உணர்வைத் தூண்டின.
6. பிரிட்டிஷாரின் பொருளாதாரச் சுரண்டல்
இந்தியாவை ஆட்சிபுரிந்த பிரிட்டிஷாரின் பொருளாதாரக் கொள்கை மக்களிடையே பிரிட்டிஷ் எதிர்ப்புணர்வை ஏற்படுத்தியது. இந்திய வணிகத்தையும் கைத்தொழிலையும் ஆங்கிலேயர் திட்டமிட்டு அழித்தனர். எனவே, பிரிட்டிஷாரின் பொருளாதாரச் சுரண்டல் இந்திய தேசியம் தோன்றுவதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாகும்.
7. இனப்பாகுபாடு
1857 ஆம் ஆண்டு கலகம் பிரிட்டிஷாருக்கும் இந்தியருக்கும் இடையே தீராத வெறுப்புணர்வையும், பரஸ்பர சந்தேக உணர்வையும் ஏற்படுத்தியிருந்தது. ஆங்கிலேயரின் உயர்வு மனப்பான்மை மேலும் பெருகியது. இந்தியாவும், இந்திய மக்களும் பல்வேறு அவமானங்களுக்கும் ஒடுக்குதல்களுக்கும் உட்படுத்தப்பட்டனர்.
8. லிட்டன் பிரபுவின் நிர்வாகம்
லிட்டன் பிரபு இந்தியாவின் பெரும்பகுதி பஞ்சத்தினால் துன்பத்தில் துவண்டு கிடந்தபோது டெல்லி தர்பாரை நடத்தினார். நாட்டு மொழி செய்தித்தாள் சட்டத்தையும் கொண்டுவந்து இந்தியாவில் பத்திரிக்கை சுதந்திரத்தை ஒடுக்கினார். ஆயுதங்கள் சட்டம் இந்தியர்கள் ஆயுதங்கள் வைத்துக் கொள்வதற்கு தடை விதித்தது. லிட்டனின் இத்தகைய நடவடிக்கைகள் இந்தியரிடையே பரவலான வெறுப்பை ஏற்படுத்தியது.
9. இல்பர்ட் மசோதா சச்சரவு
ரிப்பன் பிரபு ஆட்சிக் காலத்தில் மத்திய சட்டசபையில் இல்பர்ட் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றங்களில் ஐரோப்பிய நீதிபதிகளுக்கும் இந்திய நீதிபதிகளுக்கும் இடையே நிலவிய இன வேறுபாட்டை களைவதற்காக இம்மசோதா கொண்டுவரப்பட்டது. இந்தியாவில் வாழ்ந்த பிரிட்டிஷார் இதனை கடுமையாக எதிர்த்தனர். இறுதியில் இது திரும்பப் பெறப்பட்டது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்திய தேசிய இயக்கம் (1885 - 1905) , இந்திய, வரலாறு, இயக்கம், பிரிட்டிஷாரின், தேசிய, லிட்டன், இந்தியாவில், பிரபு, இல்பர்ட், நீதிபதிகளுக்கும், மசோதா, இடையே, ஆயுதங்கள், பொருளாதாரச், இந்தியா, இந்தியாவின், பிரம்ம, சமாஜம், சுரண்டல், மக்களிடையே, ஏற்படுத்தியது