வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 94
“அப்படியானால், நம்மைப் பார்க்கிலும் அசுரர்கள் கெட்டிக்காரர்கள் தான்.”
“அவர்களில் கொல்லர், தச்சர், தட்டார், கருமார், தந்தவேலை செய்வோர், நெய்வோர், சிற்பிகள் முதலிய ஒவ்வொரு தொழிலாளியினுடைய திறமையையும் பார்த்து நாம் அப்படியே அயர்ந்துவிடுகிறோம். அப்படிப்பட்ட திறமைசாலிகளை நம்மைப் பார்க்கிலும் கெட்டிக்காரர்கள் என்று ஒப்புக்கொள்வதில் ஆடசேபணை என்ன?”
“அசுரர்களும் வீரர்களும் கூட என்று நீ சொன்னாயே!”
“ஆம். ஆனால் அவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஆரியர்களைப் போல், அவர்களுடைய ஒவ்வொரு குழந்தையும், பால்குடி மறந்ததுமே கத்தி எடுத்து விளையாடுவதில்லை. அவர்களில் யுத்த வீரர்கள் ஒரு தனி
ஜாதியாராக இருக்கிறார்கள். மற்றவர்களும் அப்படியே யுத்த ஜாதியாரைத் தவிர மற்றவர்கள் போர்க் கலையைக் கற்பதில்லை. அந்த யுத்த வீரர்கள் மற்றவர்களையெல்லாம் தாழ்வாக நினைக்கிறார்கள். மேலும் அடிமைகளின் நிலைமையோ மிருகங்களை விடக் கேவலமானது. அவர்களை எஜமானர்கள் விற்பது மட்டுமல்ல. அவர்களுடைய உடம்பையும் உயிரையும் கூடத் தங்கள் விருப்பம் போல் உபயோகிக்கிறார்கள்.”
“ஓஹோ! அதனால்தான் அவர்கள் ஆரியர்களிடம் தோல்வியடைகிறார்கள்.”
“ஆம். அசுரர்களுடைய தோல்விக்கு இது ஒரு முக்கிய காரணம்; இன்னுமொரு பெரிய காரணம், அசுரர்கள் தங்கள் அரசனை ஜனங்ளை விட உயர்ந்த கடவுளாக மதிப்பது.”
“ஆரியர்களாகிய நாம் இந்தக் கொள்கையை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.”
“ஆம். இதனாலேயே இந்திர பதவியை எடுத்துவிட நேர்ந்தது. எங்களுடைய இந்திரன் பகவானுக்குப் பின்னே வந்த இந்திரர்களில் ஒருவன், அசுர அரசனைப் போல் ஆவதற்கு விரும்பிவிட்டான்.”
“அசுர அரசனைப்போல் ஆவதற்கா? ஆரிய சமூகத்தின் மீது ஆதிக்கம் செலுத்துவதாவது?”
“ஆம், அவன் ஒருவன் மாத்திரமன்று. அவனுக்குப் பின்னே வந்த இந்திரனும் இவ்விதமே ஆவதற்கு விரும்பினான். நம்மில் சில ஆரியர்களும் இந்த இந்திரனுக்கு உதவியாயிருப்பதும் தெரிய வந்தது.”
“இவர்களும் உதவியாயிருந்தார்களா?”
“ஆம். சிலபேர். அதுவும் உறவுமுறையில். இதனாலேயே சௌவீர்குலத்து ஆரிய சமூகம் ‘இனிமேல் யாருமே இந்திரனாகத் தேர்ந்தெடுக்கப்படக் கூடாது’ என்று முடிவு செய்தது. இன்னொரு விஷயம்; அதாவது மேகங்களின் தலைவனுக்கும் இந்திரன் என்ற பெயர்தான். ஆகையால் நம்முடைய இந்திரனும் மேகங்களின் தெய்வமான இந்திரனும் ஒன்றுதானோ என்ற பிரமை ஜனங்களுக்கு ஏற்பட்டு விடக்கூடும் என்ற பயமும் இதை எடுத்து விடுவதற்கு
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 94, புத்தகங்கள், “ஆம், பக்கம், போல், யுத்த, இந்திரனும், வால்காவிலிருந்து, கங்கை, காரணம், இதனாலேயே, இந்திரன், ஒருவன், ஆரிய, மேகங்களின், ஆவதற்கு, தங்கள், வந்த, பின்னே, அவர்களுடைய, அசுரர்கள், பார்க்கிலும், நம்மைப், சிறந்த, கெட்டிக்காரர்கள், ஒவ்வொரு, எடுத்து, அப்படியே, நாம், வீரர்கள்