வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 66
“இப்பொழுதா? சாப்பிட்ட பிறகா?”
“இப்பொழுது கொஞ்ச நேரம்.”
“நல்லது” என்று கூறிய புருகூதன், குழலை எடுத்து தன் உதடுகளிலே வைத்தான். அவனது விரல்கள் அந்தக் குழலின் சிறு துவாரங்களிலே நடனமாடின. அங்கு நின்ற விசாலமான விருட்சங்களின் நிழலிலிருந்து வெளி வந்து மெது மெதுவாக எங்கும் பரவிக் கொண்டு வரும் மாலை இருளின்
மௌனத்திலே, ஆகாயம் வரை எதிரொலிக்கும் அந்த இனிய இசையானது, திசைகள் தோறும் ஒரு மந்திரம் போன்று பரவியது. ரோசனா தன்னை மறந்தவளாய் அமர்ந்திருக்கிறாள். அவளுடைய ஏனைய புலன்களெல்லாம் ஸ்தம்பித்துவிட ஒரே ஒரு புலன் மாத்திரம் இந்த மதுரகானத்தை அள்ளி அள்ளி, இவளுக்கு ஊட்டிக் கொண்டிருந்தது. இந்த நேரத்தில், புருகூதன், இதய ராணியின் பிரிவால் துடிக்கும் தலைவனின் வேதனை ஒலியை, தனது குழலின் மூலம் வெளியிட்டுக் கொண்டிருந்தான். இசை நின்றது. சொர்க்கத்திலே மிதந்து கொண்டிருந்த தன்னை யாரோ திடீரென்று பூமியில் தூக்கி எறிந்து விட்டதாக உணர்ந்தாள் ரோசனா. அவளுடைய கண்களில் கண்ணீர் நிறைந்திருந்தது.
“புருகூத! உன்னுடைய இசை இனிமையாயிருந்தது. மிக மிக இனிமையாயிருந்தது; அழகாயிருந்தது. இந்த மாதிரி இன்னிசையை நான் இதுவரை கேட்டதே இல்லை.”
“ரோசனா! மற்றவர்களும் இப்படியேதான் கூறுகிறார்கள். ஆனால் அந்த இனிமையை நான் அறிய மாட்டேன். குழலை இதழ்களில் வைத்த மாத்திரத்தில் நான் எல்லாவற்றையும் மறந்துவிடுகிறேன். எனக்கு இந்தக் குழல் ஒன்றே போதும். இதுதான் எனக்குச் சகலமும். உலகத்தின் மற்ற எந்தப் பொருளும் என்னைப் பொறுத்தவரை இதற்கு ஈடாகாது.”
“புருகூத! வா, சாப்பிடுவோம். மாமிசம் ஆறிப்போய்விடும்.”
“ரோசனா! நான் வரும்போது என்னுடைய தாயார் இந்தத் திராட்சை ரசத்தைக் கொடுத்தாள். கொஞ்சமிருக்கிறது. மாமிசம் புசிக்கும் போதே இதையும்
அருந்தினால் நன்றாயிருக்கும்!”
“மது உனக்கு ரொம்பப் பிரியமா?”
“பிரியம் என்று சொல்ல முடியாது. பிரியம் எப்பொழுதும் திருப்தி அடைவதில்லை. ஆனால் என்னுடைய கண்கள் கொஞ்சம் சிவப்பேறியவுடன் ஒரு துளியும் அருந்த மாட்டேன்.”
“நானுங்கூட இதே மாதிரிதான் மதுவை மிதமிஞ்சிக் குடித்து விட்டு மயங்கிக் கிடக்கிறார்களே, அவர்களைப் பார்த்தாலே எனக்கு வெறுப்புத்தான்.”
ரோசனா தன்னுடைய மரத்தினால் செய்யப்பட்ட சிறிய பாத்திரத்தை எடுத்து முன்னே வைத்துக்கொண்டாள். மூன்றிலொரு பகுதி மாமிசத்தை நாய்க்குப் போட்டு விட்டு பாக்கியை அவர்கள் இருவரும் சாப்பிட்டு முடித்தனர். அவர்களைச் சுற்றி எங்கும் மை இருட்டு. பெரிய பெரிய கட்டைகளில்,
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 66, புத்தகங்கள், நான், பக்கம், ரோசனா, கங்கை, வால்காவிலிருந்து, “ரோசனா, இனிமையாயிருந்தது, மாட்டேன், எனக்கு, பெரிய, விட்டு, என்னுடைய, மாமிசம், “புருகூத, அவளுடைய, எடுத்து, குழலை, புருகூதன், கொஞ்சம், குழலின், எங்கும், சிறந்த, தன்னை, அந்த, அள்ளி