வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 62
“அப்படியானால் அவரை வீட்டிலேயல்லவா வைத்திருக்க வேண்டும்.”
“நாங்கள் என்ன செய்வது? அவர் ஒத்துக்கொண்டால் தானே? நான் பிறப்பதற்கு முன்னாலிருந்தே அவர் கிராமத்திற்கு வருவதில்லையாம்.”
“கிராமத்திற்கு வருவதில்லையா?”
“ஆம், கிராமம் என்றாலே அவருக்கு வெறுப்புத்தான். ‘மனிதன் ஒரே இடத்திலேயே இருப்பதற்காகப் படைக்கப்படவில்லை’ என்று அடிக்கடி கூறுவார். எத்தனையோ புராதன விஷயங்களை எல்லாம் எங்களுக்குச் சொல்லுவார். சரி நண்பா. உன்னுடைய பெயரை நான் தெரிந்து கொள்ளலாமா?”
“புரு வம்சத்தைச் சேர்ந்த மாத்ரி புத்ரனான புருகூதன். சகோதரி! உன்னுடைய பெயர்?”
“ரோசனா. மத்ர வம்சம்.”
“அப்படியானால் நீ என் மாமனார் குலத்துப் பெண் அல்லவா? மேல் மத்ர வம்சமா, அல்லது கீழ் மத்ர வம்சமா?”
“மேல் மத்ர வம்சம்.”
வட்சுநதியின் இடதுபக்கத்துக் கரையில் புரு வம்சத்தாரின் கிராமம் இருக்கிறது. ஆனால், அந்தக் கரையின் அடிவாரம், அதாவது கரையிலிருந்து மைதானம் வரை உள்ள சரிவுப் பூமி மத்ர வம்சத்தாரின் ஆதிக்கத்தில் இருந்தது. இவர்களைக் கீழ் மத்ரர்கள் என்றும், நதியின் வலப்பக்கத்துக் கரையிலிருந்தவர்களை மேல் மத்ரர்கள் என்றும் அழைக்கிறார்கள். வலப்பக்கத்துக் கரையின் அடிவாரம் பர்ஸு வம்சத்தாரின் ஆதிக்கத்தில் இருந்தது. ரோசனா மேல் மத்ர வம்சத்தைச் சேர்ந்தவள். புருகூதனுடைய மாமாவின் வீடும், மேல் மத்ரர்களுடைய கிராமத்தில் இருந்தது. ஒரு வம்சத்தார் வசிக்கும் கிராமம் அல்லது அவர்களுடைய ஆதிக்கத்திலுள்ள பூமி இவைகளையும் அவற்றில் வசிக்கும் மக்களையும் அந்த வம்சத்தின்- குலத்தின் பெயரையும் சேர்த்துச் சொல்லியே அழைப்பது வழக்கம்.
“ரோசனா, இன்று நாம் அந்தப் பக்கத்தை அடைவது முடியாத காரியம், தனிமையாக வருவதற்கு உனக்கு எப்படித் தைரியம் ஏற்பட்டது?”
“இரவு நேரத்தில் புலிகளின் தாக்குதலிலிருந்து இந்தக் கழுதைகளைக் காப்பாற்றுவது சிரமம் என்பதை நான் அறிவேன். ஆனால் என்ன செய்வது? என்னுடைய தந்தைக்குத் தேவையான உணவுப் பொருள்களைக் கொண்டு சேர்க்க வேண்டியது மிகவும் அவசரமாகி விட்டது. புருகூத! என் மீது அவருக்கு ரொம்ப வாஞ்சை. இப்போது அந்தப் பக்கம் செல்பவர் அதிகமாகையால், வழியிலே யாராவது துணை கிடைக்கும் என்று நம்பியே வந்தேன். மற்றும் நெருப்பை ஏற்றிக் கொண்டால் துஷ்ட மிருகங்கள் நெருங்கி வராது என்று தைரியமும் கூடத்தான்.”
“ரோசனா! வழியில் நடந்து செல்லும்போதே நெருப்பை உண்டாக்கி விடுவது சுலபமான காரியமல்ல. உன்னிடத்தில் நெருப்பை உண்டாக்கக்கூடிய
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 62, மத்ர, புத்தகங்கள், பக்கம், மேல், கிராமம், நெருப்பை, வம்சத்தாரின், நான், “ரோசனா, அல்லது, வால்காவிலிருந்து, கங்கை, ஆதிக்கத்தில், அடிவாரம், கரையின், பூமி, என்றும், அந்தப், வசிக்கும், வலப்பக்கத்துக், மத்ரர்கள், கீழ், உன்னுடைய, அவருக்கு, என்ன, செய்வது, வம்சத்தைச், “அப்படியானால், வம்சமா, சிறந்த, வம்சம், அவர்