வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 46
இதற்கிடையில் மது இருக்கும் பாத்திரங்களை ஒவ்வொன்றாகக் குடித்துக் காலியாக்கிக் கொண்டு வரும் கிரிச்ராஸ்வனைப் பார்த்த நண்பன், “கொஞ்சம் பொறு; ஏன் இவ்வளவு அவசரப்படுகிறாய்?” என்றான்.
“இதோ பார், இந்த மது எவ்வளவு ருசியாக இருக்கிறது! அதுவும் சோமாவினுடைய கைப்பட்ட இந்த மது அமிர்தமாகவல்லவா இருக்கிறது.
அமிர்தம்! இன்னும் கொஞ்ச நேரத்தில் உன்னுடைய தலைதான் சுற்றி விடுமே! அதன் பிறகு அமிர்தத்தின் சுவையை எங்கே பார்க்கப் போகிறாய்?”
“திருஜ்ராஸ்வ! நான் சோமாவை எவ்வளவு காதலிக்கிறேனென்பது உனக்குத் தெரியுமல்லவா?”
இந்த நேரத்தில் நெருப்பில் சுடப்பட்ட மூன்று மாமிசத் துண்டுகளை ஒரு தோல்பட்டையில் எடுத்துக் கொண்டு வந்த சோமா, “கிரிச்ராஸ்வ! நீ சோமாவைக் காதலிக்கவில்லை” என்றாள் தன் கணவனைப் பார்த்து.
“காதலிக்கவில்லையா, நானா? இல்லை, உன்னையும் இந்த மதுவையும் ஒருங்கே காதலிக்கிறேன்” தடுமாறிய குரலில் கூறினான்.
போதை வெறியால் கிரிச்ராஸ்வனுடைய கண்கள் அதிகமாகச் சிவந்து விட்டன. “சோமா! இன்றைக்கு நான் உனக்கு ஒரு பொருட்டாகத் தோன்றாது” என்றான்.
“ஆம்; இன்றைக்கு நான் நம்முடைய வீட்டுக்கு அதிதியாக வந்திருக்கும் திருஜ்ராஸ்வனுடையவள்” என்று சோமா கூறினாள்.
“அதிதியா அல்லது பழைய காதலனா?...” சிரித்துக் கொண்டே சொல்ல முயற்சிக்கிறான் கிரிச்ராஸ்வன்.
திருஜ்ராஸ்வன், சோமாவின் கரங்களைப் பற்றித் தன் பக்கத்தில் உட்கார வைத்து, மது நிறைந்த பாத்திரத்தையெடுத்து, அவளுடைய செவ்விதழ்களிலே
வைத்தான்; அவளும் இரண்டு மூன்று துளிகள் குடித்ததும் நண்பனை நோக்கி, “போதும். இனி நீ குடிக்க வேண்டும். எத்தனையோ நாட்களுக்குப் பிறகு, இன்றுதானே வந்திருக்கிறாய்” என்றாள்.
திருஜ்ராஸ்வன் மதுக்கிண்ணத்தை ஒரே மூச்சில் காலி செய்து விட்டு, வெறும் பாத்திரத்தை பூமியில் வைத்துக் கொண்டே, “சோமா! உன்னுடைய வாயிதழ்ப்பட்ட பாத்திரத்தில் இந்த மது எவ்வளவு இனிப்பாயிருக்கிறது தெரியுமா?” என்றான்.
இப்பொழுது கிரிச்ராஸ்வனுக்கு மதுவெறி பூரணமாகத் தலைக்கேறி விட்டது. தட்டுத் தடுமாறிக்கொண்டே தன் கிண்ணத்தில் திரும்பவும் மதுவை நிரப்பி, அதைச் சோமாவின் பக்கம் நீட்டியவனாய் சிதைந்த சொற்களால் “சோ...மா...இ...தை..க்...கொ..ஞ்...ச..ம்...அ...மி..ர்...த....மா..க்...க...மா..ட்...டா...யா” என்றான்.
சோமா அந்தப் பாத்திரத்தையும் தன்னுடைய உதடுகளால்
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 46, புத்தகங்கள், என்றான், பக்கம், சோமா, எவ்வளவு, கங்கை, நான், வால்காவிலிருந்து, இன்றைக்கு, “சோமா, திருஜ்ராஸ்வன், சோமாவின், என்றாள், கொண்டே, நேரத்தில், கொண்டு, சிறந்த, இருக்கிறது, உன்னுடைய, பிறகு, மூன்று