வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 40
“ஆம்; இது என்னுடைய நாய்தான். ஆனால் உன்னை நான் இதுவரை பார்த்ததே இல்லையே?”
“நான் குரு சமூகத்தைச் சேர்ந்தவள். இந்த வனமும் குரு-சமூகத் துடையதுதான்.”
“குரு சமூகத்தாரின் வனமா?” அவனுடைய இதயத்தில் எண்ணங்கள் மோத ஆரம்பித்தன. குரு ஜனங்கள் நிஷா-ஜனங்களுக்குப் பக்கத்து வனவாசிகள். பல வருடங்களாக இந்த இரு சமூகத்துக்குமிடையில் சுமுகமான உறவு கிடையாது. பலமுறை இரு சமூகத்திற்கும் யுத்தங்கூட நடந்திருக்கிறது. ஆனால் குரு ஜனங்கள் நிஷா ஜனங்களைக் காட்டிலும் கொஞ்சம் புத்திசாலிகள். ஆகவே யுத்தத்தில் வெற்றியைக் காண முடியாத போது, அவர்கள் அடிக்கடி தங்கள் பாதங்களைத் திறமையாக உபயோகித்திருக்கிறார்கள். கைகள் வெற்றியை அளிக்க முடியாத போது கால்களின் உதவியால் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்வது புத்திசாலித்தனந்தானே? நிஷா-சமூகத்தார் குரு-சமூகத்தை அழித்துவிட வேண்டு மென்று நிச்சயம் செய்துகொண்டிருந்தாலும் இதுவரை அவர்களுடைய எண்ணத்தைக் காரியத்தில் ஈடேற்ற முடியவில்லை. சிந்தனையில் மூழ்கி அவன் மௌனமாய் நிற்பதைப் பார்த்து யுவதி பேசத் தொடங்கினாள்...
“இந்த முயலை உன்னுடைய நாய்தான் கொன்றது. ஆகையால் இதை நீ எடுத்துக் கொள்.”
“இருந்தாலும் இது குரு சமூகத்தாரின் வனத்திலல்லவா இறந்து கிடக்கிறது!”
“ஆம். அதனாலென்ன? நாயின் எஜமானனுடைய வரவை எதிர்பார்த்துக் கொண்டேதான் நான் நின்றேன்.”
“எதிர்பார்த்துக் கொண்டா?”
“ஆம். வந்தவுடன் இந்த முயலைக் கொடுத்துவிட வேண்டும் என்ப தற்காகவே”.
குரு என்ற பெயரைக் காதில் கேட்டவுடனேயே துருவனுடைய மனத்தில் துவேஷ உணர்ச்சி தான் எழுந்தது, ஆனால் அழகியினுடைய அன்பு நிறைந்த பேச்சு துவேஷ உணர்ச்சியைத் துரத்திவிட்டது. அவன் நன்றியறிதலோடு,
“இந்த முயல் என்ன; என்னுடைய நாயையுமல்லவா நீ எனக்குத் திருப்பிக் கொடுத்திருக்கிறாய். இது எனக்கு ரொம்பப் பிரியமுள்ள நாய்.”
“ஆம். நல்ல அழகான நாய்.”
“எத்தனை பேர் கூட்டத்திலிருந்தாலும் சரி, எனது குரலைக் கேட்டதும் எனக்குச் சமீபம் ஓடி வந்துவிடும்!
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 40, குரு, புத்தகங்கள், “ஆம், பக்கம், கங்கை, வால்காவிலிருந்து, நிஷா, போது, முடியாத, “இந்த, நாய், துவேஷ, ஜனங்கள், அவன், நான், துருவனுடைய, சிறந்த, உன்னுடைய, என்னுடைய, இதுவரை, நாய்தான், சமூகத்தாரின்