வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 340
சூயஸ் கால்வாய்தான். 1875ல் எகிப்து கதீப்பினுடைய 1,77,000 சூயெஸ் கால்வாய் கம்பெனி ஷேர்களையும் நாற்பது லட்சம் பவுனுக்குத் தந்தி மூலம் டிஸ்ரைலி வாங்கினான். சாம்ராஜ்யப் பிரகடனத்திற்கு அடுத்த அடி முன்னேற்றம் இது. 1877 ஜனவரி முதல் தேதி டெல்லியில் ஒரு தர்பார் நடத்தி, மகாராணி விக்டோரியாவை சக்கரவர்த்தினி என்று பிரகடனப்படுத்தியது டிஸ்ரைலியின் சர்க்கார். இதன்மூலம் சாம்ராஜ்யக் கொள்கை பலமாக உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. இப்பொழுது லிபரல் பார்ட்டியின் கிளாட்ஸ்டன் அல்ல; அவன் தாத்தா பிரதமராயிருந்தாலும், டிஸ்ரைலியின் கொள்கையிலிருந்து மாறி நடப்பது சுலபமல்ல.”
“நாங்கள் எங்கள் மாணவர்களுக்கு இன்றுவரை, மகாராணி விக்டோரியா இந்தியாவின் சக்ரவர்த்தினிப் (கெய்ஸர்-ஏ ஹிந்த்) பதவியை ஏற்றுக்கொண்டு இந்நாட்டிற்குப் பெரிய அநுக்கிரகம் செய்திருக்கிறாள் என்றுதான் சொல்லிக் கொடுத்து வந்திருக்கிறோம்.”
“ஆறு வருடங்களுக்கு முன்னால் பிரஷ்ய அரசனும் கெய்ஸர் (சக்ரவர்த்தி) என்ற பட்டத்தைத்தான் ஏற்றுக்கொண்டான். கெய்ஸர் என்ற சொல்லுக்கு இப்பொழுது ரொம்பக் கிராக்கி ஏற்பட்டுவிட்டது. ரோம் சாம்ராஜ்யக் காலத்தில் ஒதுக்கப்பட்ட இந்தச் சொல்லிற்கு, திடீரென்று சந்தையிலே அதிகக் கிராக்கி ஏற்பட்டுவிட்டது.”
“அதோடுகூட, ரோமன் பாஷைச் சொல்லான இந்தக் கெய்ஸர் என்ற சொல்லை இந்தியாவிலே உபயோகிப்பதும், அதன் இடத்திலே ஆங்கிலச்
சொல்லான எம்பரர்-எம்பரஸ் என்ற சொற்களை வைப்பதும், ஏதோ முக்கியமான கருத்தோடுதான் என்று கருதுகிறேன்.”
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 340, கெய்ஸர், புத்தகங்கள், பக்கம், சந்தைகள், டிஸ்ரைலியின், சாம்ராஜ்யக், கங்கை, வால்காவிலிருந்து, இப்பொழுது, மகாராணி, கிராக்கி, ஏற்பட்டுவிட்டது, சொல்லான, இந்தியாவிலே, சொல்லுக்கு, சிறந்த, மூலம், ஏராளமாகப், பிரகடனப், ஜெர்மனி, டிஸ்ரைலி