வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 303
போலா பண்டித் - “சத்திய யுகம், கிரேதா யுகம். துவாபர யுகம் எல்லாம் கழிந்துவிட்டன. கலியுகத்திலும் 5000-ம் வருடங்கள் கழிந்து விட்டன. இத்தனை காலத்தில் இந்த மாதிரி ராஜாவைப்பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை.”
முன்ஷி- “கலெக்டர் சாஹிப் ஆபீசில் வேலை பார்க்கும் ஒரு குமாஸ்தா, இந்தப் பரங்கிகளெல்லாம், கொள்ளைக்காரர்கள்தான் என்று சொல்கிறார். மற்றொருவர், இந்தக் கும்பினி பரங்கி வியாபாரிகளின் கூட்டுக் கடையென்றும், அவர்கள் இந்தத் தேசத்திற்கு வியாபாரம் செய்வதற்காகத்தான் வந்தார்களென்றும் சொல்கிறார். முதலில் இங்கிருந்துதான் சாமான்களை வாங்கி அனுப்பிக் கொண்டிருந்தார்களாம். இப்பொழுது அவர்கள் சீமையிலே பெரிய பெரிய தொழிற்சாலைகளை ஆரம்பித்துவிட்டார்களாம். அவைகளில், அவர்களே, சாமான்களைத் தயார் செய்து அவர்களே இங்கே கொண்டு வந்து விற்கிறார்களாம்.”
மௌலா - “அப்படியானால் இனித் தொழிலாளர்களின் நிலைமையும் ஆபத்துத்தான்.”
2
குளிர்காலத்தில் கங்கை மிகவும் பசுமையாகக் காட்சியளிக்கும். அதன் இயற்கையான கம்பீரப்போக்கு, இன்னும் அதிகக் கம்பீரம் அடைந்துவிடும். இந்தக் காலத்தில் படகுகள் கவிழ்ந்துவிடக் கூடிய பயம் கிடையாது. ஆகவே, வியாபாரத்திற்கு இது ரொம்ப நல்ல காலமென்று வியாபாரிகள் கருதுகிறார்கள். இந்தச் சமயத்தில் நாம் கங்கைக் கரையிலே போய் உட்கார்ந்தால் நான்கு மணி நேரத்திற்குள் நூற்றுக்கணக்கான படகுகள் நம்மைத் தாண்டிச் செல்வதைப் பார்க்கலாம். அவைகளில் பெரும்பாலானவைகள் சீமையிலிருந்து வந்துள்ள கம்பெனிச் சாமான்களைச் சுமந்து கொண்டு மேல் நோக்கிச் செல்கின்றவை. பாட்னா, காஜிபூர், மீர்ஜாபூர் முதலிய வியாபார நகரங்களின் துறைகளைப்
பார்த்தால், கங்கைப் பெருக்கின் நீரே கண்ணுக்குத் தெரியாதபடி பெரிய பெரிய படகுகளால் மூடப்பட்டிருக்கும்.
பாட்னாவிலிருந்து ஒரு பெரிய படகு கீழ் நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. அது சீமையிலிருந்து வந்துள்ள வெடி உப்பு, ஜமக்காளம் முதலிய எத்தனையோ பொருள்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்தது. பாட்னாவிலிருந்து கல்கத்தா போய்ச் சேர ஒரு வாரத்திற்கு மேலாகும். ஆகவே தின்கௌடியும், கோல்மேனும் சிறிது சிறிதாக நெருங்கிப் பழகத் தொடங்கினார்கள். ஆரம்பத்தில் ஒருவரோடு ஒருவர் பழகுவதற்கே தயங்கினார்கள் என்பது உண்மைதான். தின்கௌடிக்கு வெட்டிவிடப்பட்ட தலைமயிரும், பாதங்களை முழுவதும் மூடிக் கொண்டிருக்கும் கனத்த செருப்பும், ஆணியின் தலையைப்
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 303, பெரிய, புத்தகங்கள், கங்கை, யுகம், பக்கம், வால்காவிலிருந்து, ஆகவே, படகுகள், சீமையிலிருந்து, முதலிய, கொண்டிருந்தது, பாட்னாவிலிருந்து, கொண்டு, வந்துள்ள, இந்தக், கும்பினி, சிறந்த, செய்கிறார், காலத்தில், அவைகளில், சொல்கிறார், அவர்களே