வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 289
அக்பர்-“நிச்சயமாக, இப்படிப்பட்ட வண்ணான் வேறு எங்கிருந்து கிடைப்பான்?”
பீரபல்-“இந்த மாதிரிக் குதிரையாகக் கூடிய கழுதையும் வேறு எங்கே கிடைக்கும்?”
அக்பர்-“இன்று தினம் நமக்கு மிக மகிழ்ச்சியோடு கழிந்தது. இந்த மாதிரி, மாதத்தில் ஒரு நாளாவது கழிக்க முடியுமானால்-”
3
மாடியில் நான்கு புறங்களிலும் ஜன்னல்கள் அமைக்கப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட ஓர் அறை. ஜன்னல்களிலே வர்ணத் திரைகளும்,
பச்சைக்கொடிகளும் தொங்கிக் கொண்டிருக்கின்றன. அறையின் வாசலிலே இரட்டைப்படுதாக்கள் தொங்குகின்றன. அதில் உள்படுதா பட்டுத் துணியிலே பூ வேலை செய்யப்பட்டிருந்தது. தளத்திலே அழகிய பாரசீகக் கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. அறையின் மத்தியிலே வெள்ளை மெத்தைகளின் மீது பல தலையணைகள் கிடந்தன. மெத்தையின் மீது உட்கார்ந்து கொண்டு, இரண்டு யுவதிகள் சதுரங்கம் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருத்தி நமக்குப் பரிச்சயமான சுரையா. சிவப்புப் பாவாடையும் பச்சைச் சட்டையும் அணிந்து நீலத்தாவணி போர்த்தியிருக்கும் மற்றொருத்தி, பீரபலின் பதின்மூன்று வயதுப் பெண் பூலமதி. அவர்கள் இருவரும் ஆட்டத்தைப் பற்றி யோசிப்பதிலே மூழ்கியிருந்தார்கள். ஆகவே, ஆள் வந்த காலடியோசை கூட அவர்களுக்குக் கேட்கவில்லை. ‘சுரையா’ என்று கூப்பிட்ட சப்தம் கேட்டுத்தான் இருவரும் நிமிர்ந்து பார்த்தார்கள். உடனே சுரையா மகிழ்ச்சியோடு, மாமி என்று கூறிக் கொண்டு எழுந்தாள். கமலனின் தாய் அவளைத் தழுவிக் கொண்டு கன்னங்களில் முத்தமிட்டாள்.
“மகளே! போய்ப் பார். கமலன் உனக்காகச் சிவப்பு மீன்கள் கொண்டு வந்திருக்கிறான். அவைகளை ஜாடிகளிலே விட்டுவை. நான் அதுவரை இவளோடு சதுரங்கம் ஆடுகிறேன்” என்றாள் சுரையாவின் தாய்.
“இவள் ரொம்பக் கெட்டிக்காரி அம்மா! சின்னப் பெண் என்று நினைக்காதே. என்னை இரண்டு முறை தோற்கடித்து விட்டாள்” என்று கூறிவிட்டு, சுரையா வேகமாக வெளியே போய்விட்டாள்.
மாளிகைக்குப் பின்புறத்தில் உள்ள தோட்டத்தில் ஒரு சிறு குட்டையின் அருகே, புதுமண் கலயம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அதற்குப் பக்கத்தில் கமல் நின்று கொண்டிருந்தான். அவனுடைய கைகளைப் பிடித்துக் கொண்டு சுரையா,
“சிவப்பு, நீலநிற மீன்களெல்லாம் கொண்டு வந்திருக்கிறாயா கமல்?”
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 289, கொண்டு, புத்தகங்கள், சுரையா, பக்கம், கங்கை, வால்காவிலிருந்து, சதுரங்கம், தாய், கமல், இரண்டு, இருவரும், பெண், அறையின், பீரபல், சிறந்த, அக்பர், வேறு, மகிழ்ச்சியோடு, மீது