வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 284
உணர்த்தியவனென்று, பீரபல்லைத்தானே உலகம் சொல்லுகிறது!”
“ஆனால், பீரு; தோடர்மல்லும்கூட எல்லா இடத்திலும் தடியைச் சுழற்றவில்லையே?”
“சுழற்றினாரோ இல்லையோ! உலகம் அப்படித்தான் சொல்லுகிறது. மூளையின் பலத்தைப் பற்றி நமது ஜலால் தீர்ப்புச் சொல்லுவார்.”
அக்பர்-“நிச்சயமாக, பாதுஷா ஜலால் உதீன் அக்பர் மாறுவேஷமிட்டுக் கிராமம் கிராமமாகச் சுற்றி வருவதைப் பற்றிப் பிரபலமடைந்துள்ள கதைகளில் இதுவும் இருக்கிறதா?”
பீரபல்-“நல்ல சமயத்தில் ஞாபகப்படுத்தினாய் ஜலால். இந்தக் கதைகள் என்னையும் பிராணனை வாங்குகின்றன. பீரபல்லையும் அக்பரையும் இணைத்துக் கதை கட்டுவது இப்பொழுது எங்கும் நிகழும் சம்பவமாகிவிட்டது. இந்த மாதிரிக் கதைகள் பலவற்றை நான் சேகரித்து வருகிறேன். ஒரு கதைக்கு ஒரு பவுன் வீதம் கொடுத்துச் சேகரிக்கிறேன்.”
அக்பர்-“உன்னுடைய ஒரு பவுனுக்கு ஆசைப்பட்டு கதைகள் நேராக மூளையிலிருந்து உன்னிடமே வந்து சேர்ந்து விடாமலிருக்கட்டும்!”
பீரபல்-“இருக்கலாம். அதனால் நமக்கொன்றும் வித்தியாசமில்லை. நம் இருவர் பெயராலும் என்னென்ன வேடிக்கைகள் கற்பனை செய்யப்படுகின்றன என்பதை அப்பொழுதும் தெரிந்து கொள்ளலாமல்லவா?”
அபுல்பஜல்-“நீ பவுன்களைக் கொடுத்து வாங்குவாய் என்பது எங்களுக்குத் தெரியும்.”
பீரபல்-“பஜல்! அந்தப் பேச்சை விடு. நான் சேட் சதாமிமல்லைப் போலக் கருமியல்ல.”
அபுல்பஜல்-“இல்லை பீரு! காரணமின்றி என் மீது கோபப்படாதே. உன்னுடைய கதைகளைக் கண்டு நான் ரொம்பப் பயப்படுகிறேன்.”
பீரபல்-“ஆம். நான்தானே ‘ஆகினே அக்பரி’ (அக்பரின் வாழ்க்கை வரலாறு) போன்ற பெரிய ஏட்டுச் சுவடியை எழுதி வைத்திருக்கிறேன்.”
அபுல்பஜல்-“என்னுடைய ஆயினே அக்பரியை எத்தனை பேர் படிக்கிறார்கள்? பீரபலின் கதைகளைத் திரும்பத் திரும்பச் சொல்லுபவர் எத்தனை பேர்? நீயே நியாயமாகச் சொல் தோடர்மல்!”
தோடர்மல்-“அது பீரபலுக்கே தெரியும்.”
அபுல்பஜல்-“நல்லது பீரு! உன்னுடைய பவுன் கதைகளில் ஒன்றைச் சொல், கேட்போம்.”
பீரபல்-“நீங்கள் எல்லோரும் கூடி, இந்தக் கதைகள் பவுன் கொடுத்து வாங்கியதல்ல. என் மூளையிலிருந்து தோன்றியவை என்று முடிவு
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 284, புத்தகங்கள், பீரபல், கதைகள், அபுல்பஜல், பக்கம், நான், பவுன், அக்பர், ஜலால், கங்கை, பீரு, வால்காவிலிருந்து, உன்னுடைய, தோடர்மல், சொல், எத்தனை, பேர், தெரியும், இந்தக், உலகம், சிறந்த, சொல்லுகிறது, கதைகளில், மூளையிலிருந்து, கொடுத்து