வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 277
“நீ சண்டைக்குக் கிளம்பிவிட்டாய, சௌதரி மங்கள்ராம்!”
“ஆனால், பண்டிட்ஜீ! எங்கள் பஞ்சாயத்துத் திரும்பி வந்த உடனேயே எங்கள் கௌரவமும் திரும்பி வந்து விட்டது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நிர்வாகிகளும், கிராமத் தலைவர்களும் எப்படி மரியாதை உள்ளவர்கள் ஆனார்கள் என்பதும் எங்களுக்குத் தெரியும். ஹிந்து என்றும் முஸ்லீம் என்றும் வேற்றுமை பேசுகிறீர்கள். முஸ்லீமாயிருந்தாலும், ஹிந்துவாக இருந்தாலும் அவர்கள் நிர்வாகப் பதவிக்கு வந்தவுடன், அவர்கள் ஒரே இனத்தவர்களாகவே ஆகிவிடுகிறார்கள். அதிலும் பெரும்பாலோர் ஹிந்துக்களே.”
அதிலே விட்டுப் போன ஏதோ குறையை நிரப்புவது போல் சேதாராம் தலையிட்டான்.
“ஹிந்து-முஸ்லீம் இருவரும் தனித்தனிதான் என்று நமக்குச் சொல்கிறார்கள். ஆனால், மங்கள்ராம்! தங்களை ஹிந்துப் பிராமணர்கள் என்று சொல்லிக் கொள்ளும் இவர்கள், தங்கள் வீட்டுப் பெண்களுக்கு ஏழு படுதாக்களைப் போட்டு மூடி, பேகங்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்!”
“ஆம், சௌதரி! கனோஜிலும், டெல்லியிலும் மகாராணிகள் திறந்த முகங்களோடு குதிரைகளில் ஏறிச் சவாரி செய்வதைப் பார்த்திருப்பதாக என் தாத்தா சொல்லுவார்.”
“அந்தக் காலத்தில், நம்முடைய மரியாதையைக் கொள்ளையடிக்கும் முஸல்மான்கள் யாரும் இல்லை” என்றார் பிராமணன்.
“இன்று கூட நம்முடைய மரியாதை வயலிலும், வரப்பிலும் பகிரங்கமாகச் சுற்றித் திரிகிறது. அதை யாரும் தூக்கிச் செல்லவில்லையே!”
“இந்தப் பிராமணன் சிப்பாவினுடைய அதிகாரம் செல்லுபடியாகி இருந்தால், திருடிச் செல்வதும் நடக்கும், சௌதரி மங்கள்ராம்!”
“உழைக்காமல் சாப்பிடுபவர்கள் பிறருடைய மரியாதையைத் திருடுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? இது ஹிந்து-முஸ்லீம் பிரச்சனையல்ல பண்டிட்ஜீ! உழைப்பைத் திருடுபவர்களின் வேலை. நாங்கள் பக்கா ஹிந்துக்கள். எங்கள் பெண்கள் ஏழு படுதாக்களைப் போட்டு மூடிக் கொண்டிருக்கவில்லை.”
இந்தத் தாக்குதல்களுக்கு மத்தியில் மறுபடியும் ஒரு முறை துணிந்து பிராமணன் பேசத் தொடங்கினான்.
“சௌதரி! சுல்தானின் சேனாதிபதி மல்லிக்கபூர் தெற்கே போய் நம்முடைய கோவில்களை உடைத்தான். தெய்வச் சிலைகளைக் காலிலே போட்டு மிதித்தான் என்பதெல்லாம் உனக்குத் தெரியுமா?”
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 277, புத்தகங்கள், மரியாதை, எங்கள், பக்கம், முஸ்லீம், சௌதரி, நம்முடைய, போட்டு, பிராமணன், மங்கள்ராம், வால்காவிலிருந்து, கங்கை, பண்டிட்ஜீ, திரும்பி, யாரும், நாங்கள், சிறந்த, படுதாக்களைப், என்றும், உள்ளவர்கள், ஹிந்து