வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 239
வாழ்க்கையை நான் நடத்த முடியும். ஹர்ஷனைப் போலவும், அவனைப் போன்ற ராஜரிஷிகளைப் போலவும், நான் ஆயிரக்கணக்கான யுவதிகளின் முத்தங்களைப் பெற்றவன் அல்ல. ரொம்ப அதிகமாகப் போனால் என்னுடைய காதலுக்குப் பாத்திரமானவர்கள் நூறுபேர் இருக்கலாம். இதற்கு என்னுடைய சொத்து தாராளமாகப் போதுமானது. ஆனால், அந்தச் சொத்து, வீடு எல்லாம் ஹர்ஷனுடைய ராஜ்யத்திலே இருந்தன. அவன் ஆள் மேல் ஆள் அனுப்பி என்னை அழைத்தபோது, நான் எப்படிப் போகாமல் இருக்க முடியும்? நானும் அஸ்வகோஷாயிருந்தால், வீடு, வாசல், சொத்துக்களைப் பற்றிப் பொருட்படுத்தாத மனப்பான்மை எனக்கிருந்தால் ஹர்ஷனை அலட்சியப்படுத்தியிருக்க முடியும்.
ஹர்ஷனைப் பற்றி என்னுடைய உண்மையான அபிப்ராயத்தைக் கேட்டீர்களானால் அந்தக் காலத்தில் அவன் ஒரு கெட்ட மனிதனோ அல்லது கெட்ட அரசனோ அல்ல. அவன் தனது தமையன் ராஜ்யவர்த்தனனிடம் எல்லையற்ற அன்பு வைத்திருந்தான். சகோதரனுக்காகச் சதியாகும் பழக்கத்தை மதம் ஏற்படுத்தியிருந்தாலும் கூட, ஹர்ஷன் தன் தமையனோடு நெருப்பிலே குதித்திருப்பான். அவனிடத்தில் குறைகளும் இருந்தன. அவற்றிலே மிக முக்கியமானது போலி நடிப்பு. முகஸ்துதியிலே ஆசையிருந்தும், தான் உண்மையையே கேட்க விரும்புவதாக நடிப்பது; யுவதிகளின் அழகிலே மயங்கினாலும் தன்னை நேர்மையுள்ளவனாகக் காட்டிக் கொள்வது; புகழிலே ஆசையிருந்தும் புகழைக் கண்டு ஓடுவதாகப் பறை சாற்றுவது; இவையெல்லாம்
அவனது போலி நடிப்பிற்கு உதாரணங்கள். எனது நாடகங்களை ஏன் ஹர்ஷனுடைய பெயரால் வெளியிட்டேன் என்பதை ஏற்கனவே விளக்கியிருக்கிறேன். நாங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகி நெருங்கிப் பழகிய பிறகுங்கூட, உன்னுடைய இந்த நாடகங்களை இனிமேல் உன் பெயராலேயே பிரபலமடையச் செய்’ என்று ஒரு முறையேனும் அவன் சொல்லியதே இல்லை. அவன் சொல்லியிருந்தால் அதைச் சுலபமாகச் செய்திருக்கலாம். அவனுடைய தர்பாரிலேயே இந்த நாடகங்களை இயற்றியவர் ஹர்ஷனல்ல, பாணகவிதான் என்று விளம்பரப்படுத்தி, ஒரு முறை நடிக்கச் செய்திருந்தாலே போதும்.
எனக்கு உலகத்தை உள்ளது உள்ளபடி வருணிக்க வேண்டுமென்பது ஆசை, பனிரெண்டு வருடகாலம் சுற்றுப் பிரயாணத்திலேயே நான் கழித்திருக்காவிட்டால், இந்த ஆசை ஏற்பட்டிருக்கவே மாட்டாது. அப்படி ஏற்பட்டிருந்தாலும் அதை நிறைவேற்றும் சக்தி இருந்திருக்காது. ஹிமாலயச்சரிவின் ஒரு அழகிய பூமியிலே நின்று கொண்டு நான் அந்த தாமரையால் மூடப்பட்ட தடாகத்தை வருணித்தேன். காதம்பரி மாளிகையை நான் வருணிக்கும் போது ஹிமாலயத்தின் மற்றொரு அழகிய காட்சி எனக்குத் துணையாக இருந்தது. விந்திய மலைத்தொடரிலே என் மனத்தைக் கவர்ந்த ஒரு இடத்தைத் தான், முதியவரான திராவிடத் தார்மீகரின் வாசஸ்தலமாக வருணித்தேன். ஆனால் அந்த வருணனைகளுக்குப் பிறகும் எனது எழுதுகோலுக்கு ஓய்வு கொடுத்து விட நான் விரும்பவில்லை.
ஹர்ஷனுடையவும் மற்றும் எனக்கு அறிமுகமான அரசர்களுடையவும், மாளிகைகளையும், அந்தப்புரங்களையும் அவர்களின்
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 239, நான், புத்தகங்கள், அவன், முடியும், நாடகங்களை, பக்கம், என்னுடைய, கங்கை, வால்காவிலிருந்து, ஆசையிருந்தும், போலி, கெட்ட, தான், எனது, அழகிய, எனக்கு, வருணித்தேன், அந்த, இருந்தன, போலவும், ஹர்ஷனைப், உயர்ந்த, நடத்த, யுவதிகளின், அல்ல, ஹர்ஷனுடைய, வீடு, சொத்து, சிறந்த, வாழ்க்கையை