வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 237
நடிகைகள் இந்த அந்தப்புரங்களிலிருந்துதான் வருகிறார்கள். ஆனால் திருட்டுத்தனமாகத் தப்பியோடியல்ல. அரசர்களையும், குறுநில மன்னர்களையும் என் பக்கம் இழுப்பதிலே நான் சுலபமாக வெற்றி பெற்றேன். அரசியல் விஷயத்திலல்ல. ஏனெனில் அதில் என்றும் எனக்கு அக்கறை கிடையாது. அரசர்களும் குறுநில மன்னர்களும் என்னைப் புகழ்ந்து எழுதிய நூற்றுக்கணக்கான கடிதங்கள் என்னிடம் இருக்கின்றன. அவர்கள் எனது கலைகளையும் என்னையும் புகழத் தொடங்கியதும், நான் எனது குறைகளை அவர்களிடம் அழத் தொடங்கினேன்.
“என்ன செய்யலாம் பிரபோ! கலைத்திறமை நிறைந்துள்ள யுவதிகள் பலர் இருந்தும், எனக்குக் கிடைப்பதில்லை.”
“இருந்தும்கூடக் கிடைப்பதில்லையா?”
“ஆம். ஒரே ஒரு முத்தம். ஒரு ஆலிங்கனம், அல்லது ஒருநாள் இரவு சுகம். இதற்கப்பால் ஒன்றையும் பெற முடியாமல் ஆயிரக்கணக்கான யுவதிகள் அந்தப்புரங்களிலே அடைபட்டுக் கிடக்கும்பொழுது, கலைத் திறமையுள்ள பெண்கள் எங்கிருந்து கிடைப்பார்கள்?”
“நீங்கள் சொல்வது சரிதான் ஆச்சாரியரே! நானும் அதை உணருகிறேன். ஆனால் ஒருமுறை அந்தப்புரங்களிலே ஏற்றுக் கொண்ட பெண்களை, நாங்கள் எப்படி வெளியே அனுப்புவது?”
இதன் மேல் நானே ஒரு வழி கண்டுபிடித்தேன். சங்கீதமும், நாட்டியமும் நமது அரச குமாரிகளுக்கும் குறுநில மன்னரின் புத்திரிகளுக்கும் அந்தப்புர
பெண்களுக்கும் அவசியமானது என்று ஏற்படுத்தினேன். நான் சில திறமையான பெண்களை நாட்டியம் கற்றுக் கொடுப்பதற்காக அந்தப்புரத்திற்கு அனுப்புவேன். அவர்களிடம் அந்தப்புரப் பெண்களெல்லாம் கலை பயில வேண்டுமென்று அரசனும் உத்தரவிடுவான். அவர்களில் எந்தப் பெண்ணை நாங்கள் எடுத்துக் கொள்ள விரும்புகிறோமோ, அவளுக்கு அந்தப்புர வாழ்க்கையின் கஷ்டத்தையும் நாடக வாழ்க்கையின் சுகத்தையும் எடுத்துச் சொல்லி அவளை இணங்க வைப்பார்கள்.
விதவையர் உடன்கட்டை ஏறுவதை நான் எதிர்த்த பொழுது, இந்தச் சூழ்ச்சிக்காரர்களான பிராமணர்களும் அரசர்களும் பெரிய கூச்சல் போடத் தொடங்கினார்கள். கர்ப்பச் சிதைவையும் விதவா விவாகத்தையும் இவன் பரப்ப விரும்புகிறான் என்று என்னைத் திட்டினார்கள். கரு அழித் தலை நான் எப்பொழுதும் விரும்பியதில்லை. ஆனால் விதவா விவாகத்தை நான் விரும்பினேன் என்று இப்பொழுது ஒப்புக் கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை. குப்தர்களின் ஆட்சி நம்முடைய பழைய தர்மங்களை எங்கிருந்து எங்கோ கொண்டு போய் விட்டது. நமது மரியாதைக்குரிய மகரிக்ஷிகள், பசுங்கன்றின்
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 237, நான், குறுநில, புத்தகங்கள், பக்கம், வால்காவிலிருந்து, கங்கை, எனது, பெண்களை, நாங்கள், அந்தப்புர, விதவா, வாழ்க்கையின், எங்கிருந்து, நமது, அரசர்களும், புத்திரிகளுக்கும், சிறந்த, ஆயிரக்கணக்கான, அல்லது, யுவதிகள், அவர்களிடம், அந்தப்புரங்களிலே