வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 235
அரசன் ஹர்ஷவர்த்தனன், நிறைந்த சபையிலே என்னைக் காமுகன் என்று கூறினான். அதைக் கொண்டு ஜனங்கள் தவறான முடிவுக்கு வரக்கூடும். நான் ஒரு பணக்காரத் தந்தையின் செல்வப் புதல்வன். மேலும் காளிதாஸரின் நூல்களைப் படித்துப் படித்து, என்னுடைய மனம் அதிலேயே மூழ்கிவிட்டது. என்பதில் சந்தேகமே இல்லை. என்னிடம் அழகும் இளமையும் இருந்தன. அதோடு, தேசங்களைச் சுற்றிப் பார்க்க வேண்டுமென்ற ஆசையும் இருந்தது.
நான் இளமையின் இன்பத்தை முழுவதும் அனுபவிக்க விரும்பினேன். நான் விரும்பியிருந்தால், என் தந்தையைப் போல் வீட்டில் இருந்து கொண்டே அதை முழுவதும் அனுபவித்திருக்க முடியும். ஆனால் அப்படிச் செய்வது அயோக்கியத்தனம் என்று நான் கருதினேன். மனதிற்குள் காம இச்சையையும் விபசார ஆசையையும் வைத்துக் கொண்டு, வெளியிலே புலன்களை அடக்கி ஆள்வதாகவும், ஒழுக்கசீலராகவும், மகாத்மாவாகவும் காட்டிக்கொள்வது, வெறுக்கத் தக்கது என்று கருதினேன். என்னுடைய ஆயுளில் எப்பொழுதும் நான் இந்த வெளி வேஷத்தை விரும்பியதே இல்லை. எதைச் செய்தாலும் அதைப் பகிரங்கமாகவே செய்தேன். என் தந்தை, தமது ஆயுளிலே ஒரே ஒரு முறைதான் துணிவோடு தமக்குப் பிற ஜாதிப் பெண்ணிடம் பிறந்த குழந்தையைத் தன் குழந்தை என்று ஏற்றுக் கொண்டார். ஆனால் அதை இளமையின் விறு விறுப்பு என்று ஒதுக்கிவிட வேண்டியதுதான். வாழ்க்கையின் ஆனந்தத்தை நான் விரும்பியபடி முழுவதும் அனுபவிக்க வேண்டுமானால், நான் பிறந்த கிராமத்திலிருந்து கொண்டே முடியாது என்று கருதினேன். அங்கே எல்லா சாதியினரும் சண்டைக்கு வந்துவிடுவார்கள். அதனால் என்னுடைய செல்வம் - சொத்துக்களையும் இழக்க வேண்டி நேரலாம். ஆகவே, நான் இதற்கொரு நல்ல வழி கண்டுபிடித்தேன்; ஆம், மகதத்திற்கு வெளியே போய்த்தான். திறமைசாலிகளையும் கலைப்பயிற்சி உடையவர்களையும் நண்பர்களாகப் பொறுக்கிச் சேர்த்துக் கொண்டேன். முட்டாள்களையும் முகஸ்துதியில் மயங்குபவர்களையும் நான் எப்பொழுதும் விரும்புவதில்லை. எங்கள் நாடக சபையிலே அநேக அழகிய யுவதிகள் இருந்தார்கள். அவர்கள் எல்லோருமே
வேசியர்களல்ல. இந்த நாடக சபை சுற்றி வந்து நடிப்பதற்காகவே ‘ரத்தினாவளி’ ‘பிரியதர்ஸிகா’ முதலிய நாடகத்தைத் தந்தேன். மற்ற சுகபோகிகளைப் போல், தான் ஆனந்தம் அடைவதோடு நின்றுவிடவில்லை. அரசன் ஹர்ஷவர்த்தனனைத் திருப்திபடுத்துவதற்காக நான் எனது நாடகங்களை அவன் பெயரால் வெளியிட்டேன் என்று ஜனங்கள் தவறாகக் கருதக்கூடும். எனது நாடக சபைக்காக இந்த நாடகங்களை நான் எழுதிய காலத்தில் ஹர்ஷவர்த்தனனின் பெயரை மட்டுமே கேள்விப்பட்டிருந்தேன். பின்னால் ஹர்ஷன் என்னை அழைத்துச் சென்று ஆஸ்தான கவியாக்கப் போகிறனென்பதும் எனக்கு அப்பொழுது தெரியாது. கேவலம் என் பெயரை மறைத்துக் கொள்வதற்காகவே நான் அந்த நூல்களை ஹர்ஷனின் பெயரால் வெளியிட்டேன். அந்த நாடகங்களைப் படிப்பவர்கள், அதன் மதிப்பை உணரமுடியும். அவை முற்றிலும் புதியவை. எனது நாடகங்களைப் பார்ப்பவர்களில், நற்குண சீலர்களும்
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 235, நான், புத்தகங்கள், எனது, பக்கம், என்னுடைய, நாடக, கருதினேன், முழுவதும், கங்கை, வால்காவிலிருந்து, எப்பொழுதும், பிறந்த, பெயரால், அந்த, நாடகங்களைப், பெயரை, வெளியிட்டேன், கொண்டே, நாடகங்களை, இல்லை, அரசன், தவறான, நூல்களைப், சிறந்த, சபையிலே, கொண்டு, அனுபவிக்க, இளமையின், ஜனங்கள், போல்