வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 228
கூட்டத்திலே காணக் கிடைத்தனர்.
எனக்கு வெளிநாடுகளைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆசை அதிகம் உண்டு. இந்த வெளிநாட்டுப் பிக்ஷு க்களை நான் தனித்தனியாகச் சந்தித்திருந்தால் ஒவ்வொருவருடனும், ஒவ்வொரு வருடத்தைக் கழித்திருப்பேன். இங்கு அதிகமான எண்ணிக்கையில் இவர்களை ஒன்றாகச் சந்தித்ததும், திடீரென்று பெருநிதி கிடைத்த தரித்திரனின் நிலையைப்போல், என்னையே நான் சமாளித்துக் கொள்ள முடியாமல் போய்விட்டது.
நான் ஏற்கனவே காளிதாஸரின் மூலம் திங்க நாகரின் பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறேன். மகாகவி காளிதாஸர் முடியாட்சியையும் அதன் சின்னமான குப்த சாம்ராஜ்யத்தையும், அதற்கு ஆதாரமாய் இருக்கும் பிராமண மதத்தையும், பலமாக ஆதரிப்பவர். அப்படி ஆதரிப்பதன் நோக்கம் என்னவென்பதை, நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். காளிதாஸர்; இந்த வேலைக்குத் திங்கநாகர் ஒரு பெரும் தடை என்று கருதினார். இந்தத் திராவிட நாஸ்திகன், “ஒரு விஷ்ணுவை என்ன, முப்பத்தைந்து கோடிக் கடவுள்களின் சிம்மாசனத்தையும் அசைத்துவிடுவான் போலிருக்கிறதே” என்று சொல்லுவார். “மதத்தின் பெயரால் அரசர்களுடையவும் பிராமணர்களுடையவும் நலனுக்காகத் தங்கள் என்னென்ன தந்திரங்களைக் கையாளுகிறோமோ, அவற்றின் ஆழத்திலே புதைந்து கிடக்கும் சுயநல ரகசியம், இந்த நாஸ்திகனின் பார்வையிலிருந்து தப்ப முடியவில்லை” என்று வருத்தப்படுவார். ஞானக்கடலான வசுபந்துவை அவன் குருவாகப் பெற்றிருக்கிறான். ‘அந்த அறிவுப் பெருக்கமும், அவனுடைய
தீட்சண்யமும் ஒன்று சேர்ந்திருப்பது பெரிய ஆபத்து’ என்று சொல்லுவார். பிக்ஷு சிரேஷ்டர் வசுபந்து இரண்டாவது சந்திரகுப்த விக்கிரமாதித்தியனின் காலத்தில், தலைநகரான அயோத்தியாவிற்கு வந்திருக்கிறாராம். மற்ற தர்பாரிகளைப் போலல்லாமல் மரியாதைக்குரிய
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 228, பிக்ஷு, புத்தகங்கள், நான், பக்கம், அங்கே, பெரிய, வால்காவிலிருந்து, கங்கை, சொல்லுவார், முதலிய, காளிதாஸர், என்னை, சிறந்த, போல், அதிகமாகக்