வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 221
“பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது, குழந்தாய்!”
3
இப்பொழுது நான் இருபது வயது நிரம்பிய, பலசாலியான அழகிய வாலிபன். எனது கிராமத்தின் படிப்பையெல்லாம் முடித்துக் கொண்டு உஜ்ஜைனி நகரத்திலே பெரிய பெரிய வித்வான்களிடம் கல்வி பயின்று கொண்டிருக்கிறேன். என் தாயாரின் பிறந்த வீடு உஜ்ஜைனியில் தான். உஜ்ஜைனியின் பெரிய பணக்காரர்களுள், என் பாட்டி வீட்டாரும் ஒருவர். அவர்கள் என்னைக் கட்டாயப்படுத்தி அங்கே வைத்துக் கொண்டார்கள்! என்னைப் போன்ற ஒரு கிராம மாணவனுக்கு உஜ்ஜைனி, உலகத்தின் பரப்பை எடுத்துக் காட்டும் ஓர் அத்தாட்சி. முன்னமேயே மகாகவி காளிதாஸரின் பெயரைக் கேள்விப்பட்டதோடு, அவருடைய கவிதைகளில் சிலவற்றைப் படித்தும் இருக்கிறேன். இப்பொழுது அந்த மகா கவியின் மாணவனாகும் பாக்கியமும் கிடைத்திருக்கிறது. கவிஞருக்கு, சந்திரகுப்த விக்கிரமாதித்தியனின் ஆஸ்தானத்திலே மிகுந்த மரியாதை உண்டு. இதனால் அவர் அடிக்கடி உஜ்ஜைனியை விட்டு வெளியே செல்ல நேரும். என்னுடைய குருதேவரான கவிஞரைப் பற்றி, எனக்கு அதிகக் கர்வம் உண்டு. ஆனால் காளிதாஸருக்கும் அரசருக்கும் இடையேயுள்ள தொடர்பிலே காணப்படும் அடிமை மனோபாவத்தை நான் மிகுதியும் வெறுத்தேன். அப்பொழுது கவிஞர் குமார சம்பவத்தை எழுதிக் கொண்டிருந்தார். சந்திரகுப்த விக்கிரமாத்தியனின் புதல்வன் குமார குப்தனையே, இந்தக் காவியத்தில் சங்கர புத்திரன் குமார கார்த்திகேயனாக வருணித்து அவனுக்கு அமரத்துவத்தை அளித்திருப்பதாக, காவியரசர் என்னிடம் சொன்னார். என்னுடைய ஒளிவு மறைவற்ற கூர்மையான பேச்சுக்கள் அவருக்குக் கசப்பைக் கொடுத்தாலும் கவியரசர் என்மீது ஒருநாளும் கோபம் அடைந்ததில்லை. ஒரு நாள், பேச்சு எங்கெல்லாமோ சுற்றிக் கொண்டு இந்த விஷயத்திற்கு வந்து சேர்ந்தது.
“ஆச்சாரிய! உங்களுடைய காவிய அறிவு சாம்ராஜ்யம், காலத்தைக் கடந்தது. இந்தச் சந்திரகுப்த குமார குப்தர்களின் ராஜ்யமோ கேவலம் அவர்கள் உயிரோடிருக்கும் வரைதான். அப்படியிருந்தும், தாங்கள் ஏன் இந்த அரசர்களுக்கு முன்னால் இவ்வளவு தூரம் தாழ்ந்து போகிறீர்கள்?”
“விக்கிரமாதித்தியன் உண்மையிலே தர்மஸ்தாபகன் சுபர்ண! அவன்
நம்முடைய பாரத தேசத்தை மங்கோலியர்களிடமிருந்து காப்பாற்றியிருக்கிறான்.”
“ஆனால் பஞ்சாபிலும் காஷ்மீரத்திலும் இன்றும் மங்கோலியர்கள் இருக்கிறார்களே!”
“அவர்கள் இருப்பது மிகச் சிறிய பாகம். பெரும் பகுதியிலிருந்து அவர்களை வெளியேற்றிவிட்டான்.”
“அரசர்கள் இந்த மாதிரி ஒருவரையொருவர் வெளியேற்றிக்
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 221, புத்தகங்கள், குமார, சந்திரகுப்த, பக்கம், பெரிய, கங்கை, வால்காவிலிருந்து, என்னுடைய, உண்டு, நான், சிறந்த, இப்பொழுது, கொண்டு, உஜ்ஜைனி