வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 205
“இந்த மாதிரி ஒரு சங்கம் அகில உலகத்திற்கும் ஏற்பட முடிந்தால்?”
“அது எப்படி ஏற்படும் குழந்தாய்! அரசர்களும் செல்வந்தர்களும் மற்றவர்களைத் தங்களுக்குச் சமமாக ஆகவிடுவார்களோ? ஓர் அடிமையை, பிக்ஷுக்கள் ஒரு சமயம் தங்கள் சங்கத்திலே சேர்த்துக் கொண்டு விட்டார்கள். சங்கத்தின் விதிகளின்படி, அந்த அடிமை சங்கத்திற்குள் நுழைந்த உடனேயே, அடிமைத் தன்மையிலிருந்து விடுதலையடைந்து விட்டார். எல்லோருக்கும் சமமாகக் கருதப்பட்டார். ஆனால், அந்த அடிமையின் எஜமானன் கிளர்ச்சி செய்ய ஆரம்பித்துவிட்டார். மற்ற அடிமை எஜமானர்களும் அவரோடு சேர்ந்து கொண்டனர். அரசனும் அவர்கள் கட்சியை ஆதரித்தான். ஏனெனில் அவனும் ஆயிரக்கணக்கான அடிமைகளுக்கு எஜமானன் அல்லவா? இந்த நிலையில் புத்தர் என்ன செய்ய முடியும்? எதிர்காலத்தில், அடிமைகளைச் சங்கத்தில் சேர்த்துக் கொள்ள மாட்டோம் என்று உறுதி கொடுப்பதைத் தவிர வேறு வழி இல்லை. எங்கள் சங்கம், கொந்தளிக்கும் பெருங்கடலின் மத்தியிலே ஒரு சிறு தீவு. ஆகவே உலகத்தில் ஏழ்மையும் அடிமைத்தனமும், நிலைத்திருக்கும் வரை, எங்கள் சங்கம் பூரணப் பாதுகாப்போடு இருக்குமென்று சொல்ல முடியாது.”
8
அன்று பௌர்ணமி. மாலையிலேயே வட்டத்தாளம் போன்ற சந்திரன் கீழ் வானத்திலே தோன்றி விட்டான். மேல் வானத்திலே மறைந்து கொண்டிருக்கும் சூரியனின் செந்நிறக் கதிர்கள் தேய்ந்து மறைய மறைய சந்திரனின் வெண்ணிறக் கிரணங்கள் ஆகாயமெங்கும் பரவிக் கொண்டிருந்தன. பிரபாவின் வீட்டு மேல் மாடியிலே பிரபாவும் அஸ்வகோஷு ம் உட்கார்ந்திருந்தார்கள். இப்பொழுதெல்லாம் தனது நேரத்தின் பெரும் பகுதியை அஸ்வகோஷ் பிரபாவின் வீட்டிலேயே கழிப்பது வழக்கம். நிலவு வெள்ளத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பிரபா,
“காதல! என்னைச் சரயூ நதியின் அலைகள் கூப்பிடுகின்றன. முதன் முதலாக உன்னையும் என்னையும் ஒன்றாகச் சேர்த்துத் தொட்ட அந்த அலைகள் காதல் கயிற்றால் நம்மிருவரையும் சேர்த்துப் பிணைத்த அந்த அலைகள், என்னை அழைப்பது போல் தோன்றுகிறது. இன்று இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. ஆயினும், அது இப்பொழுதுதான் நிகழ்ந்தது போல் எனக்குத் தோன்றுகிறது. நாம் எத்தனையோ நிலவொளி நிறைந்த இரவுகளைச் சரயூ நதிக்கரையிலே கழித்திருக்கிறோம். அந்த நேரங்கள் எவ்வளவோ
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 205, புத்தகங்கள், அந்த, சங்கம், எங்கள், பக்கம், அலைகள், சங்கத்தின், வால்காவிலிருந்து, கங்கை, மறைய, மேல், வானத்திலே, பிரபாவின், செய்ய, போல், தோன்றுகிறது, சரயூ, எல்லோருக்கும், தவிர, பாத்திரம், சிறந்த, மற்ற, சங்கத்திற்குள், அடிமை, சேர்த்துக், எஜமானன்