வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 192
“இன்னும் மேலே...”
“இந்த ஊர்வசியை புரூரவன், இமயம் போன்ற மலைகளிலோ, கானகத்திலோ, அருவியிலோ, குளத்திலோ தேடவில்லை. சாகேதத்தின் சரயூவிலே, உத்தியான வனத்திலே, அதன் குளத்திலே, செயற்கை மலையிலே, எழிற்கொடி வீடுகளிலே தேடி அலைகிறான்.”
“இன்னும் மேலே...”
“அவனுடைய கண்கள் பழைய காலக் கற்பனைப் புரூரவனுக்கு அனுதாபம் காட்டிக் கண்ணீரைச் சொரியவில்லை. தன்னுடைய இதயத்தின் தாபத்தைத் தணிப்பதற்காகவே கண்ணீரைச் சொரிகின்றன.”
“நானும் ஒரு வார்த்தை சொல்லலாமா, பிரபா?”
“சொல்; நன்றாகச் சொல். நானே அதிகமாகப் பேசிவிட்டேன்.”
“அன்று தினம் கொடி வீட்டிலிருந்து வெளிவரும் பொழுது உனது இந்த ஆளை விழுங்கும் கண்கள் சிவந்து வாடி இருக்கக் காரணம் என்ன?”
“உன்னுடைய அந்த அற்புதமான கானம் என்னை அழச் செய்துவிட்டது.”
“இல்லை; உனது பிரிவால் அந்தக் கீதத்தை இயற்றும் சக்தியை எனக்கு அளித்தாய்.”
“ஆனால் உனது கவிதையில் வரும் ஊர்வசி கல்மனம் படைத்தவள். நீ அப்படித்தானே அவளைச் சித்திரித்திருக்கிறாய்?”
“ஏனெனில், நம்பிக்கை இழந்து கவலையில் ஆழ்ந்திருந்தேன்.”
“என்ன காரணம்?”
“அந்த மின்னல் ஒளியை மறுபடியும் பார்க்க முடியாதென்று நினைத்தேன். அவள் என்னை மறந்து விட்டிருக்கலாமல்லவா?”
“நீ அவ்வளவு பலவீனமானவனா? அத்தனை அவ நம்பிக்கையா?”
“நம்பிக்கை உண்டாவதற்கு ஒரு காரணம் ஏற்படாத வரை, மனிதன் பலவீனனாகவே இருக்கிறான். அவநம்பிக்கையைத் தவிர அவனுக்கு வேறு என்ன ஏற்பட முடியும்?”
“சாகேதத்தில் மட்டுமல்ல; இந்தப் பார் முழுவதும் புகழ் படைத்த கவிஞன் நீ. சாகேத நகரத்தின் நீச்சுப் போட்டியிலே வெற்றி பெற்ற வாலிபன் நீ. உன்னுடைய கல்வியின் பெருமையைப் புகழாத வாய் சாகேதத்தில் உண்டா! இந்த சாகேத நகரத்தின் அழகிகள் ஒவ்வொருத்தியும் உன்னைத் தன் கண்ணின் மணியாக ஆக்கிக் கொள்ளத் துடிக்கிறார்களே!”
“இவைகளாலெல்லாம் எனக்கென்ன பலன்? எனக்குச் சர்வமும் என்னுடைய ஊர்வசிதான். அவளைச் சேர்ந்தாற்போல இரண்டு நாட்கள் பார்க்காவிட்டால், எனக்கு வாழ்க்கையே சாரமற்றதாகி விடுகிறது. உண்மை
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 192, புத்தகங்கள், காரணம், உனது, பக்கம், ஊர்வசி, கங்கை, வால்காவிலிருந்து, என்னை, என்ன, எனக்கு, நகரத்தின், அவளைச், சாகேத, மேலே, “உன்னுடைய, சிறந்த, நீந்துகிறவள், “இன்னும், கண்கள், கண்ணீரைச்