வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 154
மல்லிகாவினுடைய வீடு இப்போது எல்லா வைபவங்களும் பொருந்தியதாயிருந்தது. கோசலம் போன்ற பெரிய ராஜ்யத்தின்
சேனாதிபதியிடைய வீடு எல்லா வைபவங்களும் பொருந்தியதாய் இருக்கத் தானே வேண்டும்! மல்லிகாவுக்குப் பத்துப் புத்திரர்கள். அவர்கள் யாவரும் அரசனுடைய சேனையில் பெரிய பதவிகளை வகித்தனர். பந்துல மல்லனுக்கு நல்ல செல்வாக்கு இருந்தது. இதற்கிடையே அவனுக்குப் பல விரோதிகளும் பெருகிவிட்டனர். மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த ஒருவன், இவ்வளவு உயர்ந்த பதவி வகிப்பதை இங்கிருப்பவர்கள், சகித்துக் கொண்டிருப்பார்களா? பொறாமையடைந்த இவர்கள், அரசனின் காதுகளோடு, தொடர்பேற்படுத்திக் கொண்டனர். அரசனோ கொஞ்சம் மந்த புத்தி உள்ளவன். “பந்துலன் தங்களைப் புத்தியில்லாதவன் என்று கூறுகிறான்” என்று சொல்லி அவனுடைய மனத்திலே குரோதத்தை வளர்த்து விட்டனர். விஷயம் வளர்ந்து கொண்டே போயிற்று; கடைசியாக பந்துலன் ராஜ்யத்தையே அபகரித்துக் கொள்ள நினைக்கிறான் என்றும் அரசனுக்குத் தெரிவிக்கப்பட்டது. அவனும் இதை நம்பி விட்டான். பாவம், அரசன், எதிரிகளுடைய கைகளில் விளையாட்டுப் பொம்மையாகி விட்டான்; இவைகளைப் பார்த்த பந்துலனுடைய இதயம் மிகுந்த வேதனையடைந்தது. ஒரு நாள் அவன் முகவாட்டமடைந்திருப்பதைப் பார்த்த மல்லிகா,
“பந்துல்! அதிகச் சிந்தனையில் ஆழ்ந்திருக்கக் காரணம் என்ன?”
“மல்லிகா! அரசன் என் மீது சந்தேகம் கொள்ள ஆரம்பித்து விட்டான்.”
“சந்தேகம் கொள்ளவா? அப்படியானால் இந்த சேனாதிபதி பதவியை விட்டுவிட்டு, நாம் நம்முடைய குசீனாராவுக்குப் போய் விடுவோம். அங்கே
நமது வாழ்க்கைக்குப் போதுமான நிலபுலன்கள் இருக்கின்றன.
“அதாவது, எதிரிகளுடைய கரங்களிலே அரசனை ஒப்படைத்து விட்டுச் செல்ல வேண்டுமா? மல்லிகா! எல்லா விஷயங்களும் உனக்குத் தெரியும். மகத தேச அரசன் அஜாத சத்ரு, பல தடவைகள் காசி மாநகரத்தின் மீது படையெடுத்தான். ஒரு முறை அவனைக் கைது செய்து கொண்டு வந்தேன். ஆனால் நம்முடைய அரசன் பிரசேனஜித்தன், அவனைப் பெருந் தன்மையோடு விடுதலை செய்து தன் மகள் வஜ்ராவையும் அவனுக்கு விவாகம் செய்து கொடுத்து அனுப்பி வைத்தான். ஆனால் அஜாத சத்ரு, பாரத தேசம் முழுமைக்கும் ஏகச் சக்கரவர்த்தியாக விரும்புகிறான். ஆகவே, இந்த விவாக சம்பந்தத்தை எண்ணி அஜாத சத்ரு, மௌனமாக இருக்கக் கூடியவன் அல்ல. மல்லிகா,
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 154, புத்தகங்கள், அரசன், மல்லிகா, விட்டான், அஜாத, செய்து, சத்ரு, பக்கம், எல்லா, வால்காவிலிருந்து, கங்கை, பார்த்த, எதிரிகளுடைய, மீது, சிறந்த, அரசியின், நம்முடைய, ஆகவே, வீடு, போய், மல்லிகாவும், வைபவங்களும், கொள்ள, பெரிய, புத்தருடைய