வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 118
“ஆரிய! அப்படியானால் அந்தப் பொறுப்பைப் பாஞ்சாலர்களிடமே ஒப்புவித்துவிடலாமே!”
“பாஞ்சாலர்களிடமா? மகனே, உன்னுடைய கருத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.”
“ஆரிய! இந்த ராஜ்யம் பாஞ்சாலர்களுடையதுதானே! நம்முடைய முன்னோர்கள் இந்தப் பாஞ்சால மக்களில் ஒருவராகவே இருந்தார்கள். அந்தக்
காலத்திலே பாஞ்சாலர்களுக்கு ராஜா என்று யாரும் இருந்ததில்லை. பாஞ்சால சமுதாயமே எல்லா ஆட்சிகளையும் செலுத்திற்று. இப்போதுங் கூட மல்லவம், மத்ரம், காந்தாரம் முதலிய பிரதேசங்களில், ஜனசமூகமே அரசாட்சி செலுத்துகிறது. நம்முடைய பாட்டனார் வத்யரஷ்வனுடைய முன்னோர்களுள் ஒருவருக்கு, பேராசை, சுகபோக வாழ்க்கையில் விருப்பம், பிறருடைய உழைப்பைத் திருட வேண்டுமென்ற ஆசை முதலியவைகள் எப்படியோ உண்டாகியிருக்கிறது. அவர் பாஞ்சாலத்தின் ஜனாதிபதியாகவோ அல்லது சேனாதிபதியாகவோ இருந்திருக்கக் கூடும். ஏதாவது ஒரு பெரிய யுத்தத்தில் வெற்றி பெற்றதின் மூலம் ஜனங்களின் அன்பிற்கும், நம்பிக்கைக்கும் பாத்திரராகி ஜனங்களுக்கே துரோகம் செய்து, அவர் ஜன சமூகத்தின் அதிகாரத்தைத் தூக்கியெறிந்துவிட்டு, அசுரர்களைப் போல ஓர் அரசனுடைய ஆட்சியை ஏற்படுத்தியிருக்கிறார். வசிட்டர், விசுவாமித்திரர் முதலியோர்களுடைய முன்னோர்களுக்கு, புரோகிதப் பதவி என்று லஞ்சத்தைக் கொடுத்து, அவர்களைக் கொண்டு ஜனங்களின் கண்ணிலே மண்ணைத் தூவச் செய்திருக்கிறார். புரோகிதக் கூட்டமும், ‘இந்திரன்,’ அக்னி, சோமன், வருணன், துஷ்வ தேவன் முதலிய தெய்வங்கள், உங்களை ஆள்வதற்காகவே இந்த அரசனை அனுப்பியிருக்கிறார்கள்; இவனுடைய ஆணையைச் சிரமேற் கொள்ளுங்கள். இவனுக்குக் காணிக்கையும் வரியும் செலுத்துங்கள்’ என்று பிரச்சாரம் செய்தார்கள். இது முற்றிலும் அயோக்யத்தனம். இது கொள்ளை. யாரிடமிருந்து அதிகாரம் கிடைத்ததோ அவர்களை மறந்து விடுவது
அவர்களுக்கு வாயினால் கூட நன்றி செலுத்தாமலிருப்பது எவ்வளவு நீசத்தனமானது!”
“இல்லை மகனே! அரச பதவியை அளிப்பவர்கள் மக்கள்தான் என்பதை நாம் அங்கீகரிக்கிறோம். மகுடாபிஷேக காலத்தில் அரச சின்னங்களையும், செங்கோலையும் மக்கள்தான் அரசனுக்கு அளிக்கின்றனர்.”
“மகுடாகபிஷேக விழாவும், அரசனுடைய பிரதிக்ஞையும் வெறும்கேலிக்கூத்துக்கள்தான். உண்மையில் அரசன் ஜன சமுதாயத்தின் வேலைக்காரனா? இல்லை. தனது நாட்டு மக்களிடையே அரசன் சமமாக உட்காரவும், சமபந்தியில் சாப்பிடவும், தாரளமாகப் பழகவும் முடியாதபடி ஒதுங்கி நிற்பதே. அவன் அவர்களுடையவன் அல்ல, அவர்களைவிட உயர்ந்தவன் என்பதை எடுத்துக்காட்டுகிறதல்லவா? மத்ரத்திலோ, காந்தாரத்திலோ ஜனாதிபதி இப்படிச் செய்ய முடியுமா?”
“இங்கு அம்மாதிரி நடவடிக்கையை நாம் கையாள்வோமானால்,
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 118, புத்தகங்கள், பக்கம், கங்கை, வால்காவிலிருந்து, பாஞ்சால, அரசனுடைய, மக்கள்தான், நாம், அரசன், ஜனங்களின், என்பதை, மகனே, என்னால், சிறந்த, “ஆரிய, நம்முடைய, முதலிய, அவர்