நெடுநல்வாடை - பத்துப்பாட்டு

கூதிர்க்காலம் நிலைபெற்றமையால் நேர்ந்த விளைவுகள்
மனையுறை புறவின் செங்காற் சேவல் | 45 |
இன்புறு பெடையொடு மன்றுதேர்ந் துண்ணாது இரவும் பகலும் மயங்கிக் கையற்று மதலைப் பள்ளி மாறுவன இருப்பக் |
வீட்டுப் புறாக்கள். இணை புறாக்கள். செங்கால் புறாக்கள். ஆணும் பெண்ணுமாகச் சேர்ந்தே மேயும் பழக்கம் கொண்ட புறாக்கள். மன்ற வெளிகளில் மெயும் புறாக்கள். குளிர் மிகுதியால் அவை மேயவில்லை. மதலைப் பள்ளியில், மாட இருக்கையில் இடம் மாறி மாறி உட்காருகின்றன. இரவிலும் பகலிலும் ஒன்றை ஒன்று பார்த்துக்கொண்டு மயங்கிக் கிடக்கின்றன.
கடியுடை வியனகர்ச் சிறுகுறுந் தொழுவர் கொள்ளுறழ் நறுங்கல் பலகூட்டு மறுக |
50 |
வடவர் தந்த வான்கேழ் வட்டம் தென்புல மருங்கிற் சாந்தொடு துறப்பக் கூந்தல் மகளிர் கோதை புனையார் பல்லிருங் கூந்தல் சின்மலர் பெய்ம்மார் தண்ணறுந் தகர முளரி நெருப்பமைத்து |
55 |
இருங்காழ் அகிலொடு வெள்ளயிர் புகைப்பக் கைவல் கம்மியன் கவின்பெறப் புனைந்த செங்கேழ் வட்டஞ் சுருக்கிக் கொடுந்தறிச் சிலம்பி வானூல் வலந்தன தூங்க வானுற நிவந்த மேனிலை மருங்கின் |
60 |
வேனிற் பள்ளித் தென்வளி தரூஉம் நேர்வாய்க் கட்டளை திரியாது திண்ணிலைப் போர்வாய்க் கதவம் தாழொடு துறப்பக் கல்லென் துவலை தூவலின் யாவரும் தொகுவாய்க் கன்னல் தண்ணீர் உண்ணார் |
65 |
பகுவாய்த் தடவில் செந்நெருப் பார ஆடல் மகளிர் பாடல்கொளப் புணர்மார் தண்மையிற் றிரிந்த இன்குரல் தீந்தொடை கொம்மை வருமுலை வெம்மையிற் றடைஇக் கருங்கோட்டுச் சீறியாழ் பண்ணுமுறை நிறுப்பக் |
70 |
காதலர்ப் பிரிந்தோர் புலம்பப் பெயல்கனைந்து கூதிர்நின் றன்றாற் போதே மாதிரம் |
செல்வர் மாளிகை. பாதுகாப்பாளர் இருக்கும் மாளிகை. பணியாளர்கள் கொள்ளுப் போன்ற வட்டமான கல்லில் மணக்கூட்டுப் பொருள்களை அரைக்கின்றனர். (வெப்பம் தரும் மணக்கூட்டுப் பொருள் அது) வடநாட்டு மக்கள் தந்த வட்டமான சந்தனக் கல்லும், தென்னாட்டுச் சந்தனக் கட்டையும் அரைக்கப்படாமல் தூங்குகின்றன. (சந்தனம் குளுமைக்காகப் பூசப்படுவது ஆகையால் குளிர் காலத்தில் பயனற்றுக் கிடக்கிறது) மகளிர் நிறைந்த பூக்கள் கொண்ட மாலைகளைத் தோளில் அணிந்துகொள்ளவில்லை. சிலவாகிய ஒரிரு பூக்களையே தலையில் செருகிக்கொண்டனர். அதனைச் சூடிக்கொள்வதற்கு முன்பு தகரம் பூசிக் குளித்தனர். நெருப்பில் அகில் கட்டைத் துகள்களையும், வெண்ணிற அயிரையும் (சாம்பிராணியையும்) போட்டுப் புகைத்து உலர்த்திக்கொண்டனர். கைத்தொழில் கலைஞன் கம்மியன் செய்து தந்த செந்நிற வட்ட விசிறி விரிக்கப்படாமல் சுருக்கித் தொங்கவிடப்பட்டிருந்தது. அதில் சிலந்திப் பூச்சி கூடு கட்டும் அளவுக்குப் பயன்படுத்தப்படாமல் கிடந்தது. மேல்மாடத்தில் தென்றல் வீசும் கட்டளை(சன்னல்) திறக்கப்படாமல் தாழிட்டு அடைத்து வைக்கப்பட்டிருந்தது. வாடைக்காற்றின் நீர்த் துவலை தூவிக்கொண்டே இருந்ததால் யாரும் கூம்பிய கன்னல் சொம்பில் குளிர்ந்த நீரைப் பருகவில்லை. மாறாக அகன்ற வாயை உடைய தடவில் (தடா வட்டி) சுடச்சுட வெந்நீரைப் பருகினர். ஆடல் மகளிர்க்குப் பாட்டுப் பாடவேண்டிய நிலை வந்தபோது, பாடலுக்கு யாழிசை கூட்டவேண்டிய நிலையில், யாழ் நரம்பு குளிர் ஏறிக் கிடந்ததால், அவற்றைச் சூடாக்கும் பொருட்டு, யாழ் நரம்புகளை மகளிர் தம் குவிந்து திரண்ட முலை முகடுகளில் தேய்த்துச் சூடேற்றிக் கொண்டனர். காதலனைப் பிரிந்திருக்கும் மகளிர் புலம்பிக்கொண்டிருந்தனர். பெருமழையோடு கூதிர்க் குளிர் வீசிக்கொண்டிருந்தது.
அரசியின் அரண்மனை
மனை வகுத்த முறை
மனை வகுத்த முறை
விரிகதிர் பரப்பிய வியல்வாய் மண்டிலம் இருகோற் குறிநிலை வழுக்காது குடக்கேர் பொருதிறஞ் சாரா அரைநாள் அமயத்து |
75 |
நூலறி புலவர் நுண்ணிதிற் கயிறிட்டுத் தேஎங் கொண்டு தெய்வம் நோக்கிப் பெரும்பெயர் மன்னர்க் கொப்ப மனைவகுத்து |
அரசிக்கு மனை அரண்மனைக்கு ஒப்பாக அமைக்கப்பட்டது. கட்டடக்கலை நூலில் தேர்ச்சி பெற்ற கலைஞன் அரசிக்கு மனை வகுத்தான். கயிறு கட்டி மனையைப் பிரித்துக் காட்டினான். நிறுத்தியும் கிடத்தியும் ஒரே கோலை மடித்து வைத்து சூரியனின் நிழல் ஒன்றன் நிழல் மற்றொன்றின்மீது படும்படி நிறுத்துவது இருகோல் குறிநிலை. ஏறும் பொழுதாகவும், இறங்கும் பொழுதாகவும் இல்லாத நண்பகலில் இருகோல் குறிநிலை நிறுத்தி அவன் நிலத்தின் திசையைக் கணித்துக்கொண்டான். திசைமுகத்துக்கு ஏற்பக் கயிறு கட்டி, சுவர் அமைக்க அடிக்கோடு போட்டுக்கொண்டான். (மூலைப்பக்கம் நோக்காமல் கட்டடம் கட்டுவது அக்கால மரபு). தெய்வத்தை வாழ்த்திய பின்னர் மனையை வகுத்துக் காட்டினான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நெடுநல்வாடை - பத்துப்பாட்டு, மகளிர், புறாக்கள், இலக்கியங்கள், குளிர், நெடுநல்வாடை, தந்த, பத்துப்பாட்டு, குறிநிலை, யாழ், கலைஞன், மணக்கூட்டுப், சந்தனக், கட்டி, இருகோல், பொழுதாகவும், நிழல், காட்டினான், கயிறு, வட்டமான, அரசிக்கு, துவலை, கொண்ட, மாறி, மதலைப், மயங்கிக், சங்க, துறப்பக், கூந்தல், தடவில், ஆடல், கன்னல், கட்டளை, கம்மியன், மாளிகை