திருக்குறள் - 71.குறிப்பறிதல்
கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும் மாறாநீர் வையக்கு அணி. |
701 |
ஓருவர் சொல்லாமலே அவறுடைய முகத்தை நோக்கி அவர் கருதிய குறிப்பை அறிகின்றவன் எப்போதும் உலகத்திற்க்கு ஓர் அணிகலன் ஆவான்.
ஐயப் படாஅ(து) அகத்தது உணர்வானைத் தெய்வத்தோ டொப்பக் கொளல். |
702 |
ஐயப்படாமல் மனத்தில் உள்ளதை உணரவல்லவனை (அவன் மனிதனே ஆனாலும்) தெய்வத் தோடு ஒப்பாக கொள்ள வேண்டும்.
குறிப்பிற குறிப்புணர் வாரை உறுப்பினுள் யாது கொடுத்தும் கொளல். |
703 |
(முகம் கண் இவற்றின்) குறிப்புக்களால் உள்ள குறிப்பை உணர வல்லவரை நாட்டின் உறுப்புக்களுள் எதைக் கொடுத்தாவது துணையாக பெற்றுக்கொள்ள வேண்டும்.
குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை உறுப்போ ரனையரால் வேறு. |
704 |
ஒருவன் மனதில் கருதியதை அவன் கூறாமலே அறிந்து கொள்ள வல்லவரோடு மற்றவர் உறுப்பால் ஒத்தவராக இருந்தாலும் அறிவால் வேறுபட்டவர் ஆவார்.
குறிப்பிற குறிப்புணரா வாயின் உறுப்பினுள் என்ன பயத்தவோ கண். |
705 |
(முகம் கண் இவற்றின்) குறிப்புக்களால் உள்ளக்குறிப்பை உணராவிட்டால், ஒருவனுடைய உறுப்புகளுள் கண்கள் என்னப் பயன்படும்.
அடுத்தது காட்டு பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம். |
706 |
தன்னை அடுத்தப் பொருளைத் தன்னிடம் காட்டும் பளிங்கு போல், ஒருவனுடைய நெஞ்சில் மிகுந்துள்ளதை அவனுடைய முகம் காட்டும்.
முகத்தின் முதுக்குறைந்த துண்டோ உவப்பினும் காயினும் தான்முந் துறும். |
707 |
ஒருவன் விருப்பம் கொண்டாலும், வெறுப்புக் கொண்டாலும் அவனுடைய முகம் முற்ப்பட்டு அதைத் தெரிவிக்கும், அம் முகத்தைவிட அறிவு மிக்கது உண்டோ.
முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி உற்ற துணர்வார்ப் பெறின். |
708 |
உள்ளக் குறிப்பை நோக்கி உற்றதை உணரவல்லவரைப் பெற்றால், (அவரிடம் எதையும் கூறாமல்) அவறுடைய முகத்தை நோக்கி நின்றால் போதும்.
பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின் வகைமை உணர்வார்ப் பெறின். |
709 |
கண்பார்வையின் வேறுபாடுகளை உணரவல்லவரைப் பெற்றால்( ஒருவனுடைய மனதில் உள்ள) கையையும் நட்பையும் அவனுடைய கண்களே சொல்லி விடும்.
நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால் கண்ணல்ல தில்லை பிற. |
710 |
யாம் நுட்பமான அறிவுடையேம் என்று பிறர் கருத்தை அறிபவரின் அளக்குங்கோல், ஆராய்ந்து பார்த்தால் அவனுடையக் கண்களே அல்லாமல் வேறு இல்லை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்குறள் - 71.குறிப்பறிதல் , முகம், இலக்கியங்கள், அவனுடைய, குறிப்பை, காட்டும், குறிப்பறிதல், திருக்குறள், ஒருவனுடைய, ஒருவன், வேறு, மனதில், கொண்டாலும், கண்களே, அளக்குங்கோல், பெற்றால், உணரவல்லவரைப், பெறின், உள்ள, உறுப்பினுள், அவறுடைய, முகத்தை, சங்க, கீழ்க்கணக்கு, பதினெண், நோக்கி, கொளல், குறிப்பிற, இவற்றின், வேண்டும், கொள்ள, அவன், குறிப்புக்களால்