திருக்குறள் - 52.தெரிந்து விளையாடல்
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும். |
511 |
நன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல்புடையவன் (செயலுக்கு உரியவனாக) ஆளப்படுவான்.
வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை ஆராய்வான் செய்க வினை. |
512 |
பொருள் வரும் வழிகளைப் பெருக்கச் செய்து, அவற்றால் வளத்தை உண்டாக்கி, வரும் இடையூறுகளைஆராய்ந்து நீக்க வல்லவனே செயல் செய்ய வேண்டும்.
அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும் நன்குடையான் கட்டே தெளிவு. |
513 |
அன்பு, அறிவு, ஐயமில்லாமல் தெளியும் ஆற்றல், அவா இல்லாமை ஆகிய இந் நான்கு பண்புகளையும் நிலையாக உடையவனைத் தெளியலாம்.
எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான் வேறாகும் மாந்தர் பலர். |
514 |
எவ்வகையால் ஆராய்ந்து தெளிந்த பிறகும்(செயலை மேற்க்கொண்டு செய்யும் போது) அச் செயல்வகையால் வேறுபடும் மக்கள் உலகத்தில் பலர் உண்டு.
அறிந்தாற்றிச் செய்கிற்பாற்(கு) அல்லால் வினைதான் சிறந்தானென்று ஏவற்பாற் றன்று. |
515 |
(செய்யும் வழிகளை) அறிந்து இடையூறுகளைத்தாங்கிச் செய்து முடிக்க வல்லவனை அல்லாமல், மற்றவனைச் சிறந்தவன் என்றுக் கருதி ஒருச் செயலைச் செய்யுமாறு ஏவக்கூடாது.
செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோ(டு) எய்த உணர்ந்து செயல். |
516 |
செய்கின்றவனுடைய தன்மையை ஆராய்ந்து, செயலின் தன்மையையும் ஆராய்ந்து, தக்கக் காலத்தோடு பொறுந்துமாறு உணர்ந்து செய்விக்க வேண்டும்.
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல். |
517 |
இந்தச் செயலை இக்கருவியால் இன்னவன் செய்துமுடிப்பான் என்று ஆராய்ந்த பிறகே அத் தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும்.
வினைக்குரிமை நாடிய பின்றை அவனை அதற்குரிய னாகச் செயல். |
518 |
ஒருவன் ஒரு தொழிலைச் செய்வதற்கு உரியவனாக இருப்பதை ஆராய்ந்த பிறகு அவனைத் அத் தொழிலுக்கு உரியவனாகும்படிச் செய்ய வேண்டும்.
வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக நினைப்பானை நீங்கும் திரு. |
519 |
மேற்க்கொண்ட தொழிலில் எப்போதும் முயற்சி உடையவனின் உறவைத் தவறாக நினைக்கும் தலைவனை விட்டுச் செல்வம் நீங்கும்.
நாடோ றும் நாடுக மன்னன் வினைசெய்வான் கோடாமை கோடா(து) உலகு. |
520 |
தொழில் செய்கின்றவன் கோணாதிருக்கும் வரையில் உலகம் கெடாது, ஆகையால் மன்னன் நாள்தோறும் அவனுடைய நிலைமையை ஆராய வேண்டும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்குறள் - 52.தெரிந்து விளையாடல் , வேண்டும், ஆராய்ந்து, இலக்கியங்கள், தெரிந்து, திருக்குறள், விளையாடல், செயல், செயலை, பலர், செய்யும், நீங்கும், ஆராய்ந்த, உணர்ந்து, மன்னன், வரும், சங்க, கீழ்க்கணக்கு, பதினெண், நன்மையும், நாடி, செய்து, உரியவனாக, செய்ய