திரிகடுகம் - பதினெண் கீழ்க்கணக்கு

மிகைப் பாடல்கள்
|
கரப்பவர் நீர்மைத்தாய் நண்பகலில் தோன்றல், இரப்பவர்கண் தேய்வேபோல் தோன்றல், இரப்பவர்க்கு ஒன்று ஈவார் முகம்போல் ஒளிவிடுதல், - இம் மூன்றும் ஓவாதே திங்கட்கு உள. (புறத்திரட்டு. 1222) |
1 |
மறைந்து வாழ்பவர்களைப் போல் பகலில் தோன்றலும், இரப்பவர்கள் போல் தேய்ந்து காணப்படுதலும், இரப்பவர்களுக்கு கொடுப்பவர்கள் போல் முகம் ஒளிருதலும், ஆகிய இம்மூன்றும் சந்திரனுக்கு உள்ள இயல்புகளாகும்.
| பொருள் இல் ஒருவற்கு இளமையும், போற்றும் அருள் இல் ஒருவற்கு அறனும், தெருளான் திரிந்து ஆளும் நெஞ்சினான் கல்வியும், - மூன்றும் பரிந்தாலும் செய்யா பயன். (புறத்திரட்டு.1228) |
2 |
பொருள் இல்லாதவனின் இளமையும், அருள் இல்லாதவனின் அறத்தன்மையும், தெளிவில்லாதவன் பெற்ற கல்வியும், ஆகிய இம்மூன்றினாலும் பயனில்லை.
| சால் நெறிப் பாரா உழவனும், தன் மனையில் மானம் ஒன்று இல்லா மனையாளும், சேனை உடன்கொண்டு மீளா அரசும், - இம் மூன்றும் கடன் கொண்டார் நெஞ்சில் கனா. |
3 |
| ஏர்க் குற்றம் பாரா உழவனும், இன் அடிசில் பாத்திட்டு ஊட்டாத பைந்தொடியும், ஊர்க்கு வரும் குற்றம் பாராத மன்னும், - இம் மூவர் இருந்திட்டு என்? போய் என், இவர்? |
4 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திரிகடுகம் - பதினெண் கீழ்க்கணக்கு, இலக்கியங்கள், மூன்றும், திரிகடுகம், போல், கீழ்க்கணக்கு, பதினெண், இல்லாதவனின், கல்வியும், அருள், பாரா, குற்றம், உழவனும், இளமையும், பொருள், ஒன்று, தோன்றல், புறத்திரட்டு, ஆகிய, சங்க, ஒருவற்கு