திரிகடுகம் - பதினெண் கீழ்க்கணக்கு

அற்புப் பெருந் தளை யாப்பு நெகிழ்ந்து ஒழிதல் கற்புப் பெரும் புணை காதலின் கை விடுதல், நட்பின் நய நீர்மை நீங்கல், - இவை மூன்றும் குற்றம் தரூஉம் பகை. |
86 |
உயிரிடத்தில் அன்பு காட்டாதிருத்தலும், பொருள் மீது கொண்ட விருப்பத்தினால் கல்வியை விட்டுவிடுதலும், ஒருவரிடம் கொண்ட நட்பால் நீதித் தன்மையினின்று நீங்குதலும் குற்றங்களை விளைவிக்கின்ற பகைகளாம்.
கொல்வது தான அஞ்சான் வேண்டலும், கல்விக்கு அகன்ற இனம் புகுவானும், இருந்து விழு நிதி குன்று விப்பானும், - இம் மூவர் முழு மக்கள் ஆகற்பாலார். |
87 |
ஓருயிரைக் கொல்வதற்கு அஞ்சாதவனும், கல்லாதவர் கூட்டத்தோடு சேர்வதும், ஒரு முயற்சியும் செய்யாமல் இருக்கின்ற செல்வத்தை அழிப்பவனும், மூடர்கள் ஆவார்.
பிணி தன்னைத் தின்னுங்கால் தான் வருந்துமாறும், தணிவு இல் பெருங் கூற்று உயிர் உண்ணுமாறும், பிணைச் செல்வம் மாண்பு இன்று இயங்கல், - இம் மூன்றும் புணை இல் நிலை கலக்குமாறு. |
88 |
நோய் வந்து துன்பப்படுவதும், எமன் உயிரைக் கொண்டு போக வருத்தும் வகையும், செல்வம் இழந்த நிலையும், மன உறுதியைக் குலைப்பவையாகும்.
அருளினை நெஞ்சத்து அடைகொடாதானும், பொருளினைத் துவ்வான் புதைத்து வைப்பானும், இறந்து இன்னா சொல்லகிற்பானும், - இம் மூவர் பிறந்தும் பிறந்திலாதார். |
89 |
அருளினை நிறைத்து வைத்துக் கொள்ளாதவனும், செல்வத்தை மறைத்து வைத்துக் கொள்கின்றவனும், பிறர்க்கு துன்பம் தரும் சொற்களைச் சொல்பவனும், மக்கட் பிறப்பாக கருதப்பட மாட்டார்.
ஈதற்குச் செய்க, பொருளை! அற நெறி சேர்தற்குச் செய்க, பெரு நூலை! யாதும் அருள் புரிந்து சொல்லுக, சொல்லை! - இம் மூன்றும் இருள் உலகம் சேராத ஆறு. |
90 |
செல்வத்தை உரியவனுக்கு ஈதலும், அறநெறிகளைத் தரும் நூலைச் செய்தலும், அருள் தரும் சொற்களைச் சொல்லுதலும், ஆகிய இம்மூன்றும் நரக உலகத்திற்கு செல்லாமைக்குரிய வழிகளாகும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
திரிகடுகம் - பதினெண் கீழ்க்கணக்கு, இலக்கியங்கள், செல்வத்தை, மூன்றும், தரும், பதினெண், கீழ்க்கணக்கு, திரிகடுகம், செய்க, அருள், வைத்துக், சொற்களைச், மூவர், சங்க, புணை, கொண்ட, செல்வம், அருளினை