திணைமாலை நூற்றைம்பது - பதினெண் கீழ்க்கணக்கு
ஒல்வார் உளரேல் உரையாய் ஒழியாது செல்வார்என் றாய்நீ சிறந்தாயே - செல்லாது அசைந்தொழிந்த யானை பசியால்ஆள் பார்த்து மிசைந்தொழியும் அத்தம் விரைந்து. |
86 |
ஆற்றுவர் ருளராயின், அவர் பிரிவினை அவர்கட்கு உரையாய்; தவிராதே நங்காதலர் செல்வா ரென்றாய்; ஆதலால், நீ எனக்கு மெய்யாகச் சிறந்தாயே யன்றோ? போகமாட்டாதே வருந்தி யிறந்து வீழ்ந்த யானைகளை அங்குள்ளவர்கள் தம் பசியானே எங்கும் பார்த்துத் தின்று போம்அத்தத்தினை விரைந்து.
ஒன்றானும் நாம்மொழிய லாமோ செலவுதான் பின்றாது பேணும் புகழான்பின் - பின்றா வெலற்கரிதாம் வில்வலான் வேல்விடலை பாங்காச் செலற்கு அரிதாச் சேய சுரம். |
87 |
பிறழாத வெலற்கரிதாகிய வில்லினை வல்லானாகிய வேல்விடலை தான் துணையாகச் சுரத்தைச் செலற்கரிதாக யாதானுஞ் சொல்லலாமோ? அப் பேணும் புகழான் பின்சேறல் ஒழுக்கத்திற் பிறழாது காண்.
அல்லாத என்னையும் தீரமற்று ஐயன்மார் பொல்லாத தென்பது நீபொருந்தாய் - எல்லார்க்கும் வல்லி ஒழியின் வகைமைநீள் வாட்கண்ணாய் புல்லி ஒழிவான் புலந்து. |
88 |
எம்பெருமானோடு பொருந்தி இங்கு நின்றும் ஒழிந்து போவதற்கு முன்பு வேறுபட்டு மற்றதன்கண் அல்லாத வென்னை நீ இங்கே யிருந்து நம் மையன்மார் பொல்லாத தென்று கொள்ளும் மனத்தின் கண்ணுள்ள கோளினையுந் திருத்தி நீ பொருந்தாய்; எல்லார்க்குந் தத்த மனத்தின்கணுள்ள வேறுபா டொழியுமாயின், வல்லி போன்றிருவாட்கண்ணாய்! அல்லதூஉம், உடன்போகின்ற என்னைப் புல்லிக் கொண்டொழிவான் வேண்டி மனத்தின்கட் புலந்து நீங்குதற்கு வல்லையாயொழியின், வகைமையையுடைய நீண்ட வாட்கண்ணாய்! ஆண்மையல்லாத வுரைகளை என்னை நீக்கி, நம்மையன்மார் பொல்லாத தென்னுங் கருத்தினையும் நீக்கி எல்லார்க்கும் பொருந்துவாயாக,என்றுமாம்.
நண்ணிநீர் சென்மின் நமர்அவர் ஆபவேல் எண்ணிய எண்ணம் எளிதரா - எண்ணிய வெஞ்சுடர் அன்னானை யான்கண்டேன் கண்டாளாம் தண்சுடர் அன்னாளைத் தான். |
89 |
பொருந்தி நீர் சென்மின்; அவரும் நமக்குச் சுற்றத்தாராயின், நீர் அவரைச் சென்றெய்த வேண்டுமென்று எண்ணிய எண்ணம் எளிது; நீர் கருதிய வெய்ய பகலோனன்னானை யான்கண்டேன், கண்டாளாம் தண்மதியனையாளை இவள்தான்.
வேறாக நின்னை வினவுனேன் தெய்வத்தால் கூறாயோ கூறுங் குணத்தினனாய் - வேறாக என்மனைக்கு ஏறக்கொணருமோ வெல்வளையைத் தன்மனைக்கே உய்க்குமோ தான். |
90 |
நிமித்தஞ் சொல்வார் பலருள்ளும் நின்னை வேறாகக்கொண்டு வினவாநின்றேன்: உன்னுடைய தெய்வத்தன்மையுடைய கழங்காற் பார்த்துக் கூறாய்;உலகத்தார் கூறும் நற்குணத்தினை யுடையனாய் எல்வளையை உடன் - கொண்டுபோனவன் என்மனைக்கே மணஞ் செய்வதாகக் கொண்டு வருமோ? அஃதன்றி, யாம் வெறாகத் தன் மனைக்கே மணஞ்செய்யக் கொண்டு போமோதான்?
தேடல் தொடர்பான தகவல்கள்:
திணைமாலை நூற்றைம்பது - பதினெண் கீழ்க்கணக்கு, இலக்கியங்கள், தான், பொல்லாத, திணைமாலை, எண்ணிய, நீர், பதினெண், கீழ்க்கணக்கு, நூற்றைம்பது, சென்மின், நீக்கி, எண்ணம், கொண்டு, வேறாக, பொருந்தி, கண்டாளாம், யான்கண்டேன், நின்னை, எல்லார்க்கும், விரைந்து, சிறந்தாயே, உரையாய், சங்க, பேணும், வேல்விடலை, வாட்கண்ணாய், வல்லி, அல்லாத, புலந்து