நாலடியார் - 11.பழவினை

பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று வல்லதாம் தாய்நாடிக் கோடலைத் - தொல்லைப் பழவினையும் அன்ன தகைத்தேதற் செய்த கிழவனை நாடிக் கொளற்கு |
101 |
பல பசுக்களின் கூட்டத்தில் கொண்டு போய் விட்டாலும் இளைய பசுங்கன்று தன் தாயைத் தேடி அடைதலில் வல்லதாகும். அது போல முற்பிறப்பிற் செய்த பழவினையும், அவ்வினை செய்தவனைத் தேடி அடைதலில் வல்லமை யுடையதாகும். (பல பசுக்களின் நடுவே விட்ட கன்று தன்தாயைத் தேடி எப்படி அடைகின்றதோ அப்படியே ஒருவன் செய்த பாவ புண்ணியமும் அவனை வந்து அடையும். இதனால் கருமங்கள் அந்தந்தப் பிறப்பிலேயே கழியும் என நினையாமல் பல பிறப்பிலும் தொடர்ந்து பயனைத் தரும் என உணர்ந்து நல்வினையே செய்ய வேண்டும்).
உருவும் இளமையும் ஒண்பொருளும் உட்கும் ஒருவழி நில்லாமை கண்டும் - ஒருவழி ஒன்றேயும் இல்லாதான் வாழ்க்கை உடம்பிட்டு நின்றுவீழ்ந் தக்க துடைத்து |
102 |
அழகும், வாலிபமும், மேன்மையான பொருளும், பலர் அஞ்சத்தக்க மதிப்பும் ஓரிடத்தில் நிலைத்திராமையைப் பார்த்தும், யாதேனும் ஒரு வகையில் ஒரு நற்செயலும் செய்யாதவனுடைய வாழ்க்கை, உடலெடுத்துச் சில காலம் நின்று பயனில்லாது பின் அழிந்து போகும் தன்மையுடையது.
வளம்பட வேண்டாதார் யார்யாரு மில்லை; அளந்தன போகம் அவரவர் ஆற்றான் விளங்காய் திரட்டினார் இல்லை களங் கனியைக் காரெனச் செய்தாரும் இல் |
103 |
செல்வம் முதலியவற்றால் வளமுடன் வாழ்தலை விரும்பாதவர் யாரும் உலகில் இல்லை. ஆனால் அவரவர் செய்த புண்ணியங்களுக்கு ஏற்ப அவரவர்களுடைய இன்ப நுகர்வுகள் (சுகபோகங்கள்) வரையறை செய்யப்பட்டுள்ளன. விளாங்காயை உருண்டை வடிவமாகச் செய்தவரும் இல்¨ல் களாப்பழத்தைக் கருமையுடையதாகச் செய்தவரும் இல்லை! (விளாங்காய் ஒருவரால் திரட்டப்படாமல் இயற்கையாகத் திரண்டிருப்பது போலவும், களாப்பழம் ஒருவரால் கறுப்பாக்கப்படாமல் தானே கறுப்பாய் இருப்பது போலவும், அவரவர் இன்பமும் அவரவர் புண்ணிய இயற்கையால் அமைந்துள்ளது. ஆகவே இன்பம் விரும்புவோர் நல்வினையே செய்தல் வேண்டும்).
உறற்பால நீக்கல் உறுவர்க்கும் ஆகா, பெறற்பால அனையவும் அன்னவாம் மாரி வறப்பின் தருவாரும் இல்லை அதனைச் சிறப்பின் தணிப்பாரும் இல். |
104 |
வந்து சேரும் தீமைகளை முனிவர்களாலும் தடுக்க முடியாது! அவ்வாறே பெறக் கூடிய நன்மைகளையும் யாராலும் தடுக்க முடியாது! மழை பெய்யாது ஒழிந்தால் அதனைப் பெய்விப்பாரும் இல்லை! அதிகமாகப் பெய்தால் அதனைத் தடுத்து நிறுத்துவாரும் இல்லை! (மழை வறண்ட போது அதனைத் தருவதற்கோ, அது அதிகமானால் அதனைத் தணிப்பதற்கோ எப்படி ஒருவருக்கு ஆற்றல் இல்லையோ அப்படியே ஒருவருக்குத் தீவினைப்பயன் நோ¢ட்ட போதும் நல்வினைப் பயன் நோ¢ட்ட போதும் தடுக்கும் ஆற்றல் இல்லை! அவற்றின் பயன்களை அனுபவித்தே ஆக வேண்டும்).
தினைத்துணைய ராகித்தந் தேசுள் அடக்கிப் பனைத்துணையார் வைகலும் பாடழிந்து வாழ்வர்; நினைப்பக் கிடந்தது எவனுண்டாம் மேலை வினைப்பயன் அல்லால் பிற. |
105 |
பனை அளவாக உயர்ந்த பெருமை மிக்கவரும் தினையளவாகச் சிறுத்துச் சிறுமையுற்று வருந்தி வாழ்வர்! இதற்குக் காரணம் முற்பிறப்பில் செய்த தீவினையின் பயனேயன்றி வேறில்லை. (உயர்ந்தோர் தாழ்ந்தோர் வதற்குக் காரணம் முன் செய்வினையே).
பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் வீயவும் கல்லாதார் வாழ்வதும் அறிதிரேல் - கல்லாதார் சேதனம் என்னுமச் சாறகத் தின்மையால் கோதென்று கொள்ளாதாம் கூற்று. |
106 |
பல மேன்மைப்பட்ட நூற்கேள்விகளின் பயனை அறிந்தவர்கள் இறப்பதையும், அறிவீனர்கள் நீடு வாழ்வதையும் அறிந்திருக்கிறீர்கள்! இதற்குக் காரணம், அறிவு என்னும் 'சாறு' கல்லாதார் உள்ளத்தில் இல்லாமையால் அவர்களை வெறும் 'சக்கை' என்று நினைத்து எமன் கொள்வதில்லை.
இடும்பைகூர் நெஞ்சத்தார் எல்லாரும் காண நெடுங்கடை நின்றுழல்வ தெல்லாம் - அடம்பப்பூ அன்னங் கிழிக்கும் அலைகடல் தண்சேர்ப்ப முன்னை வினையாய் விடும். |
107 |
அடம்பங் கொடியின் மலர்களை அன்னங்கள் கோதிக் கிழிக்கும் அலைகடலினது குளிர்ச்சியாகிய கரையையுடைய மன்னனே! சிலர் துன்பம் மிகுந்த மனமுடையவராகி யாவரும் காண, பொ¢ய வீடுகளின் தலைவாயிலில் நின்று பிச்சை கேட்டு வருந்தும் செயல் எல்லாம் முற்பிறப்பிற் செய்த தீவினையின் பயனே ஆகும். (வறுமைக்குக் காரணம் தீவினையே).
அறியாரும் அல்லர் அறிவ தறிந்தும் பழியோடும் பட்டவை செய்தல் - வளியோடி நெய்தல் நறவுயிர்க்கும் நீள்கடல் தண்சேர்ப்ப! செய்த வினையான் வரும். |
108 |
காற்று வீசி நெய்தல் நிலங்களிலே தேனைச் சிந்தும் நீண்ட கடலினது குளிர்ச்சி பொருந்திய கரையையுடைய வேந்தனே! அறிவீனராக இன்றி அறிவுடையவராகத் திகழ்ந்தாலும் சிலர், பழியுடன் கூடிய செயல்களைச் செய்தல், முற்பிறப்பிற் செய்த தீவினையின் விளைவாகும். (நல்லறிவு கெடுதற்கும் காரணம் தீவினையே).
ஈண்டுநீர் வையத்துள் எல்லாரும எத்துணையும் வேண்டார்மன் தீய; விழைபயன் நல்லவை; வேண்டினும் வேண்டா விடினும் உறற்பால தீண்டா விடுதல் அரிது. |
109 |
மிகுதியான நீரையுடைய கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் வாழும் எல்லாரும் சிறிய தீமையையும் விரும்பமாட்டார்கள். நல்லதையே விரும்புவார்கள். ஆனால் அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் முன்வினைப் பயனால் வரத்தக்கவை வராமற் போவதில்லை. (நம் விருப்பத்திற்கும் விரும்பாமைக்கும் ஏற்ப எதுவும் நடப்பதில்லை; வினைப்படியே எல்லாம் நடக்கும்)
சிறுகா பெருகா முறைபிறழ்ந்து வாரா உறுகாலத் தூற்றாகா ஆமிடத்தே யாகும் சிறுகாலைப் பட்ட பொறியும் அதனால் இறுகாலத் தென்னை பரிவு. |
110 |
கரு அமைந்த காலத்திலேயே உண்டான ஊழ் வினைகள் குறையமாட்ட வளரமாட்ட முறைமாறி வரமாட்ட துன்பம் வந்த காலத்தே ஊன்றுகோலாக மாட்ட எவையும் வரவேண்டிய காலத்தே வந்து சேரும். அப்படியிருக்க மரண காலத்தில் ஒருவன் வருந்துவது ஏன்? (ஒருவனது வினைப்பயன் குறைந்தும், வளர்ந்தும், மாறியும் வருவதில்லை. வரும் காலத்து நிச்சயம் வரும். ஆதலால் நேரும் துன்பங்கள் குறித்துத் துயருறுவது வீண்).
தேடல் தொடர்பான தகவல்கள்:
நாலடியார் - 11.பழவினை , செய்த, இல்லை, காரணம், அவரவர், இலக்கியங்கள், கல்லாதார், வேண்டும், தீவினையின், அதனைத், பழவினை, செய்தல், முற்பிறப்பிற், வந்து, தேடி, நாலடியார், வரும், வினைப்பயன், வாழ்வர், போதும், ஆற்றல், நோ¢ட்ட, இதற்குக், காலத்தே, தீவினையே, கூடிய, கிழிக்கும், தண்சேர்ப்ப, எல்லாரும், சிலர், கரையையுடைய, எல்லாம், துன்பம், நெய்தல், போலவும், பசுக்களின், அடைதலில், எப்படி, அப்படியே, பழவினையும், விடினும், பதினெண், கீழ்க்கணக்கு, சங்க, ஒருவன், நல்வினையே, ஒருவரால், உறற்பால, சேரும், தடுக்க, செய்தவரும், ஏற்ப, ஒருவழி, வாழ்க்கை, நின்று, முடியாது