இன்னிலை - பதினெண் கீழ்க்கணக்கு
தூவி நெருஞ்சிக்காய் நீர்முள்ளி தும்பைஅலர் காவியன சேல்கண் குறுந்தொடியார் - ஆவிக்கு இனியர் இணைசேரார் ஈர்ங்கண் மாஞாலத் தனிமைக்கு அவரோர் கரி. |
26 |
காமம்வீழ் இன்பக் கடலாமே காதலரின் ஏம இருக்கையே தூம்திரையாம் - ஏமத்தீண்டு ஆம்பாலே தோன்றும் அளிஊடலாம்பரலில் தெற்றித் தெறிப்பாம் ஒளி ஒளிபாய் கண்ணே சீர்த் துற்றுகப்பாய்ப் பெற்ற மகவு. |
27 |
கறங்குபறை காணா உறுஊனைக் காதல் பிறங்கறை நாவாரும் அதே - திறம்இரங்கி ஊடிஉணர் வாரே தாம்இசைவார் பல்காலம் ஈடிலதோர் இன்ப விருந்து. |
28 |
தோற்றாரே வெல்வர் துணைமிசைவார் கோட்டியானை ஏற்றுக்கழல் தொடியார் மிக்காரை யார்வரைவர் போற்றளி கூடல் கரி. |
29 |
காதல் விரிநிலத்து ஆராவகை காணார் சாதல்நன்று என்ப தகைமையோர் - காதலும் ஆக்கி யளித்தழிக்கும் கந்தழியின் பேருருவே நோக்கிலரை நோவது எவன். |
30 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இன்னிலை - பதினெண் கீழ்க்கணக்கு, இலக்கியங்கள், இன்னிலை, கீழ்க்கணக்கு, பதினெண், காதல், சங்க