இன்னிலை - பதினெண் கீழ்க்கணக்கு
இது நான்கு பகுதிகளைக் கொண்டது. இந் நூலைச் செய்தவர்
பொய்கையார்.
கடவுள் வாழ்த்து
வேலன் தரீஇய விரிசடைப் பெம்மான் வாலிழை பாகத்து அமரிய கொழுவேல் கூற்றம் கதழ்ந்தெறி கொன்றையன் கூட்டா உலகம் கெழீஇய மலிந்தே. |
|
- பாரதம் பாடிய பெருந்தேவனார். |
நூல்
1. அறப்பால்
அன்று அமரில் சொற்ற அறவுரை வீழ் தீக்கழுது மன்றுயர்ந்து போந்த வகை தேர்மின் - பொன்றா அறம் அறிந்தோன் கண்ட அறம் பொருள் கேட்டல்லல் மறமொறுக்க வாய்த்த வழக்கு. |
1 |
பொருள் விழைவார் போற்றார் உடல்நலம் நம்மை அருள் விழைவார் அதே முழுஎவ்வம் பாய்நீல் இருள் இழையார் வீழ்வார் மேல் பால் ஆக்கார் ஆமாறு அருள்இழையார் தாமும் அது. |
2 |
கோலப் புறவில் குரல்கூவிப் புள்சிமிழ்த்தோன் காலில் தளைபரப்பச் சீர்ஒலிக்கும் - மாலின் விரிநிழல் தாம் எய்தார் தீப்பழுவத்து உய்ப்பர் உரிமை இவண்ஓரா தார். |
3 |
கழிவிரக்கம் கொள்ளார் கதழ் வாளார் வேர்த்துப் பழிமுறுகக் கோடார் பயன் பேர்த்து - அழிமுதலை இல்லம் கொண்டு ஆக்கார் இடும்பைத் தளை தணப்பர் நல்லறனை நாளணி கொள்வார். |
4 |
திரைத்த விரிக்கின் திரைப்பின் நாவாய்போல் உரைத்த உரையதனைக் கேட்டும் - உரைத்த பயன்தவா செய்வார் சிலர்ஏதம் நெஞ்சத்து இயன்றவா செய்வார் பலர். |
5 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இன்னிலை - பதினெண் கீழ்க்கணக்கு, இலக்கியங்கள், இன்னிலை, கீழ்க்கணக்கு, பதினெண், உரைத்த, செய்வார், ஆக்கார், அறம், சங்க, பொருள், விழைவார்