ஆச்சாரக் கோவை - பதினெண் கீழ்க்கணக்கு
நூல்முறை உணர்ந்தவர் துணிவு
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
வால் முறையான் வந்த நான் மறையாளரை மேல் முறைப் பால் தம் குரவரைப்போல் ஒழுகல் - நூல் முறையாளர் துணிவு. |
61 |
வாலிய முறையான் வந்த நான்மறையாளரை மேலாகிய முறைமையையுடைய தங்குரவரைப்போல் கொண்டொழுகுதல் நூல்முறையாளர் துணிவு.
கருத்துரை: குலத்தாலும் ஒழுக்கத்தாலும் சிறந்த அந்தணரைத் தம்முடைய குரவர்போற் கொண்டு ஒழுக வேண்டும்.
சான்றோர்க்குச் செய்யும் ஒழுக்கம்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
கால்வாய்த் தொழுவு, சமயம், எழுந்திருப்பு, ஆசாரம் என்ப, குரவர்க்கு இவை; இவை சாரத்தால் சொல்லிய மூன்று. |
62 |
காலின்கண் தொழுதலும், அவர் நன்றென்ற சமயத்தின்கண் நிற்றலும், அவரைக் கண்டால் எழுந்திருத்தலும் என இவை குரவர்க்குச் செய்யும் ஆசாரம் என்று சொல்லுவர் நல்லார்; குரவர்க்குச் செய்யும் ஆசாரங்கள் பல வற்றுள்ளும் சாரத்தாற் சொல்லப்பட்டவை இம் மூன்றுமேயாகும்.
கருத்துரை: குரவர்க்குச் செய்யும் ஆசாரங்கள் அவரைக் காலின்கண் வணங்குதல், அவர் கூறும் நெறியில் நிற்றல், கண்டவுடன் எழுந்திருத்தல் ஆகிய மூன்று.
கற்றவர் கண்ட நெறி
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
துறந்தாரைப் பேணலும், நாணலும், தாம் கற்ற மறந்தும் குரவர் முன் சொல்லாமை, மூன்றும், திறம் கண்டார் கண்ட நெறி. |
63 |
அருந்தவரைப் பாதுகாத்தலும், பழிநாணலும், தாங் கற்றவற்றைக் குரவர்முன் மறந்தாயினுஞ் சொல்லாமையும் என இம்மூன்றும் திறப்பட வறிந்தார் அறிந்தநெறி.
கருத்துரை: அருந்தவரைப் பேணலும், பழி நாணலும், குரவர்முன் தாங் கற்ற திறத்தை யெடுத்துரையா திருத்தலும் சிறந்த வொழுக்கங்கள்.
வாழக்கடவர் எனப்படுபவர்
(இன்னிசை வெண்பா)
பார்ப்பார், தவரே, சுமந்தார், பிணிப்பட்டார், மூத்தார், இளையார், பசு, பெண்டிர், என்று இவர்கட்கு ஆற்ற வழி விலங்கினாரே - பிறப்பினுள் போற்றி எனப்படுவார். |
64 |
பார்ப்பாரும், தவசியரும், சுமந்தாரும், பிணிப்பட்டாரும், மூத்தாரும், பிள்ளைகளும், பசுக்களும், பெண்டிரும் என்று சொல்லப்பட்ட இவர்க்கு மிகவும் வழி கொடுத்து விலகிப் போயினாரே மக்களாகப் பிறந்தவர்களுள் பிறராற் போற்றி யென்று சொல்லப்படுவார்.
கருத்துரை: பார்ப்பார் தவசியர் முதலியவர்களைக் கண்டால் வழிவிட்டுச் செல்வதே நெறி.
தனித்திருக்கக் கூடாதவர்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
ஈன்றாள், மகள், தன் உடன்பிறந்தாள், ஆயினும், சான்றார் தமித்தா உறையற்க - ஐம் புலனும் தாங்கற்கு அரிது ஆகலான்! |
65 |
தாயுடனாயினும், மகளுடனாயினும், தம் உடன் பிறந்தாளுடனாயினும் சான்றோர் தனித்து உறையார், ஐம்புலன்களையுந் தடுக்கல் அரிதாகலான்.
கருத்துரை: ஐம்புலன்களையும் அடக்கி நடத்த லருமையாதலின் தாய் முதலியவர்களுடனும் தனித்திருத்தல் தகாது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆச்சாரக் கோவை - பதினெண் கீழ்க்கணக்கு, வெண்பா, கருத்துரை, சிந்தியல், செய்யும், இலக்கியங்கள், இன்னிசைச், பதினெண், கோவை, துணிவு, நெறி, ஆச்சாரக், கீழ்க்கணக்கு, குரவர்க்குச், கற்ற, பேணலும், நாணலும், பார்ப்பார், போற்றி, கண்ட, குரவர்முன், தாங், அருந்தவரைப், மூன்று, சிறந்த, வந்த, முறையான், சங்க, ஆசாரம், காலின்கண், கண்டால், அவரைக், அவர், ஆசாரங்கள்