பதிற்றுப்பத்து - பதிகம்
ஆராத் திருவின் சேரலாதற்கு வேளாவிக் கோமான் பதுமன் தேவி ஈன்ற மகன் முனை பனிப்பப் பிறந்து, பல் புகழ் வளர்த்து, ஊழின் ஆகிய உயர் பெருஞ் சிறப்பின் |
5 |
பூழி நாட்டைப் படையெடுத்துத் தழீஇ, உருள் பூங் கடம்பின் பெருவாயில் நன்னனை நிலைச் செருவின் ஆற்றலை அறுத்து, அவன் பொன் படு வாகை முழுமுதல் தடிந்து, குருதிச் செம் புனல் குஞ்சரம் ஈர்ப்ப, |
10 |
செருப் பல செய்து, செங்களம் வேட்டு, துளங்கு குடி திருத்திய வளம் படு வென்றிக் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலைக் காப்பியாற்றுக் காப்பியனார் பாடினார் பத்துப் பாட்டு. |
அவைதாம்: கமழ் குரற் துழாய், கழை
அமல் கழனி, வரம்பு இல் வெள்ளம், ஒண் பொறிக் கழற் கால், மெய் ஆடு
பறந்தலை, வாள் மயங்கு கடுந் தார், வலம்படு வென்றி, பரிசிலர் வெறுக்கை,
ஏவல் வியன் பணை, நாடு காண் அவிர் சுடர்: இவை பாட்டின் பதிகம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து - பதிகம், இலக்கியங்கள், பதிகம், பதிற்றுப்பத்து, எட்டுத்தொகை, சங்க