பதிற்றுப்பத்து - 62. வென்றிச் சிறப்பு
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : வரைபோல் இஞ்சி
இழை அணிந்து எழுதரும் பல் களிற்றுத் தொழுதியொடு, மழை என மருளும் மா இரும் பல் தோல், எஃகு படை அறுத்த கொய் சுவற் புரவியொடு மைந்துடை ஆர் எயில் புடை பட வளைஇ, வந்து, புறத்து இறுக்கும்-பசும் பிசிர் ஒள் அழல் |
5 |
ஞாயிறு பல்கிய மாயமொடு சுடர் திகழ்பு, ஒல்லா மயலொடு பாடு இமிழ்பு உழிதரும் மடங்கல் வண்ணம் கொண்ட கடுந் திறல், துப்புத் துறை போகிய கொற்ற வேந்தே! புனல் பொரு கிடங்கின், வரைபோல் இஞ்சி, |
10 |
அணங்குடைத் தடக் கையர் தோட்டி செப்பி, பணிந்து திறை தருப, நின் பகைவர், ஆயின், புல்லுடை வியன் புலம் பல் ஆ பரப்பி, வளனுடைச் செறுவின் விளைந்தவை உதிர்ந்த களன் அறு குப்பை காஞ்சிச் சேர்த்தி, |
15 |
அரியல் ஆர்கை வன் கை வினைநர், அருவி ஆம்பல் மலைந்த சென்னியர், ஆடு சிறை வரி வண்டு ஓப்பும் பாடல் சான்ற, அவர் அகன் தலை நாடே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து - 62. வென்றிச் சிறப்பு , இலக்கியங்கள், வென்றிச், வண்ணம், பதிற்றுப்பத்து, சிறப்பு, வரைபோல், இஞ்சி, சங்க, எட்டுத்தொகை, துறை