பதிற்றுப்பத்து - 60. மன்னவன் கொடைச் சிறப்பொடு வென்றிச் சிறப்பும் கூறுதல்
துறை : விறலி ஆற்றுப்படை
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : மரம் படு தீம் கனி
கொலை வினை மேவற்றுத் தானை; தானே இகல் வினை மேவலன்; தண்டாது வீசும்: செல்லாமோதில், பாண்மகள்! காணியர்- மிஞிறு புறம் மூசவும் தீம் சுவை திரியாது, அரம் போழ்கல்லா மரம் படு தீம் கனி |
5 |
அம் சேறு அமைந்த முண்டை விளை பழம் ஆறு செல் மாக்கட்கு ஓய் தகை தடுக்கும், மறாஅ விளையுள் அறாஅ யாணர், தொடை மடி களைந்த சிலையுடை மறவர் பொங்கு பிசிர்ப் புணரி மங்குலொடு மயங்கி, |
10 |
வரும் கடல் ஊதையின் பனிக்கும், துவ்வா நறவின் சாய் இனத்தானே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து - 60. மன்னவன் கொடைச் சிறப்பொடு வென்றிச் சிறப்பும் கூறுதல் , இலக்கியங்கள், மன்னவன், தீம், கூறுதல், பதிற்றுப்பத்து, கொடைச், சிறப்பும், சிறப்பொடு, வென்றிச், வினை, மரம், வண்ணம், எட்டுத்தொகை, சங்க