பதிற்றுப்பத்து - 54. மன்னவன் கொடைச் சிறப்பும் தன் குறையும் கூறி, வாழ்த்துதல்
துறை : காட்சி வாழ்த்து
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : நில்லாத் தானை
வள்ளியை என்றலின், காண்கு வந்திசினே, உள்ளியது முடித்தி; வாழ்க, நின் கண்ணி! வீங்கு இறைத் தடைஇய அமை மருள் பணைத் தோள், ஏந்து எழில் மழைக்கண், வனைந்து வரல் இள முலை, பூந் துகில் அல்குல், தேம் பாய் கூந்தல், |
5 |
மின் இழை, விறலியர் நின் மறம் பாட; இரவலர் புன்கண் தீர, நாள் தொறும், உரை சால் நன் கலம் வரைவு இல வீசி, அனையை ஆகன்மாறே, எனையதூஉம் உயர் நிலை உலகத்துச் செல்லாது, இவண் நின்று, |
10 |
இரு நில மருங்கின் நெடிது மன்னியரோ!- நிலம் தப இடூஉம் ஏணிப் புலம் படர்ந்து, படு கண் முரசம் நடுவண் சிலைப்ப, தோமர வலத்தர் நாமம் செய்ம்மார், ஏவல் வியங்கொண்டு, இளையரொடு எழுதரும் |
15 |
ஒல்லார் யானை காணின், நில்லாத் தானை இறை கிழவோயே! |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து - 54. மன்னவன் கொடைச் சிறப்பும் தன் குறையும் கூறி, வாழ்த்துதல் , இலக்கியங்கள், வாழ்த்துதல், மன்னவன், கூறி, பதிற்றுப்பத்து, குறையும், கொடைச், சிறப்பும், தானை, நின், நில்லாத், வண்ணம், சங்க, எட்டுத்தொகை