பதிற்றுப்பத்து - 46. கொடைச் சிறப்பு
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : கரை வாய்ப் பருதி
இழையர், குழையர், நறுந் தண் மாலையர், சுடர் நிமிர் அவிர் தொடி செறித்த முன்கை, திறல் விடு திருமணி இலங்கு மார்பின் வண்டு படு கூந்தல் முடி புனை மகளிர் தொடை படு பேரியாழ் பாலை பண்ணி, |
5 |
பணியா மரபின் உழிஞை பாட, இனிது புறந்தந்து, அவர்க்கு இன் மகிழ் சுரத்தலின்- சுரம் பல கடவும் கரை வாய்ப் பருதி ஊர் பாட்டு எண் இல் பைந் தலை துமிய, பல் செருக் கடந்த கொல் களிற்று யானை, |
10 |
கோடு நரல் பௌவம் கலங்க வேல் இட்டு உடை திரைப் பரப்பின் படு கடல் ஓட்டிய வெல் புகழ்க் குட்டுவன் கண்டோ ர்- செல்குவம் என்னார், பாடுபு பெயர்ந்தே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து - 46. கொடைச் சிறப்பு, இலக்கியங்கள், கொடைச், பதிற்றுப்பத்து, சிறப்பு, வாய்ப், பருதி, வண்ணம், சங்க, எட்டுத்தொகை, பாட்டு