பதிற்றுப்பத்து - 38. கொடைச் சிறப்பு
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : பரிசிலர் வெறுக்கை
உலகத்தோரே பலர்மன் செல்வர்; எல்லாருள்ளும் நின் நல் இசை மிகுமே- வளம் தலைமயங்கிய பைதிரம் திருத்திய களங்காய்க் கண்ணி நார் முடிச் சேரல்! எயில் முகம் சிதையத் தோட்டி ஏவலின், |
5 |
தோட்டி தந்த தொடி மருப்பு யானை, செவ் உளைக் கலிமா, ஈகை வான் கழல், செயல் அமை கண்ணிச் சேரலர் வேந்தே! பரிசிலர் வெறுக்கை! பாணர் நாள்அவை! வாணுதல் கணவ! மள்ளர் ஏறே! |
10 |
மை அற விளங்கிய, வடு வாழ் மார்பின், வசை இல் செல்வ! வானவரம்ப! 'இனியவை பெறினே தனித்தனி நுகர்கேம், தருக' என விழையாத் தா இல் நெஞ்சத்து, பகுத்தூண் தொகுத்த ஆண்மை, |
15 |
பிறர்க்கு என வாழ்தி நீ ஆகன்மாறே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து - 38. கொடைச் சிறப்பு, இலக்கியங்கள், கொடைச், பதிற்றுப்பத்து, சிறப்பு, வெறுக்கை, தோட்டி, பரிசிலர், சங்க, எட்டுத்தொகை, வண்ணம்