பதிற்றுப்பத்து - 23. வென்றிச் சிறப்பு
துறை : வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : ததைந்த காஞ்சி
அலந்தலை உன்னத்து அம் கவடு பொருந்திச் சிதடி கரைய, பெரு வறம் கூர்ந்து, நிலம் பைது அற்ற புலம் கெடு காலையும், வாங்குபு தகைத்த கலப் பையர் ஆங்கண் மன்றம் போந்து, மறுகு சிறை பாடும் |
5 |
வயிரிய மாக்கள் கடும் பசி நீங்க, பொன் செய் புனைஇழை ஒலிப்ப, பெரிது உவந்து, நெஞ்சு மலி உவகையர் உண்டு மலிந்து ஆட, சிறு மகிழானும் பெருங் கலம் வீசும், போர் அடு தானைப் பொலந்தார்க் குட்டுவ! |
10 |
நின் நயந்து வருவேம் கண்டனம்: புல் மிக்கு, வழங்குநர் அற்றென, மருங்கு கெடத் தூர்ந்து, பெருங் கவின் அழிந்த ஆற்ற, ஏறு புணர்ந்து அண்ணல் மரையா அமர்ந்து இனிது உறையும் விண் உயர் வைப்பின காடு ஆயின-நின் |
15 |
மைந்து மலி பெரும் புகழ் அறியார் மலைந்த போர் எதிர் வேந்தர் தார் அழிந்து ஒராலின்- மருது இமிழ்ந்து ஓங்கிய நளி இரும் பரப்பின் மணல் மலி பெருந் துறைத் ததைந்த காஞ்சியொடு முருக்குத் தாழ்பு எழிலிய நெருப்பு உறழ் அடைகரை, |
20 |
நந்து நாரையொடு செவ் வரி உகளும் கழனி வாயிற் பழனப் படப்பை, அழல் மருள் பூவின் தாமரை, வளை மகள் குறாஅது மலர்ந்த ஆம்பல், அறாஅ யாணர் அவர் அகன்தலை நாடே. |
25 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து - 23. வென்றிச் சிறப்பு , இலக்கியங்கள், சிறப்பு, வென்றிச், பதிற்றுப்பத்து, போர், நின், பெருங், வண்ணம், சங்க, எட்டுத்தொகை, ததைந்த