நற்றிணை - 61. குறிஞ்சி
கேளாய், எல்ல தோழி! அல்கல் வேணவா நலிய, வெய்ய உயிரா, ஏ மான் பிணையின் வருந்தினெனாக, துயர் மருங்கு அறிந்தனள் போல, அன்னை, 'துஞ்சாயோ, என் குறுமகள்?' என்றலின், |
5 |
சொல் வெளிப்படாமை மெல்ல என் நெஞ்சில், 'படு மழை பொழிந்த பாறை மருங்கில் சிரல் வாய் உற்ற தளவின், பரல் அவல், கான் கெழு நாடற் படர்ந்தோர்க்குக் கண்ணும் படுமோ?' என்றிசின், யானே. |
10 |
ஏடி தோழீ ! யான் கூறுகின்ற இதனைச் கேட்பாயாக ! நேற்றிரவில் வேட்கை மிகுதியாலுற்ற ஆசைப்பெருக்கமானது துன்புறுத்தலாலே வெப்பமாகப் பெருமூச்செறிந்து; அம்புபட்ட மான்பிணைபோல வருத்த முற்றேனாக; அப்பொழுது அன்னை யானுற்ற துன்ப மிகுதியை அறிந்தாள் போல என்னை நோக்கி 'என்னிள மகளே ! நீ தூங்குவாயல்லையோ என்றலும்; யான் சொல்வது வெளியிலே தெரியாதபடி மெல்ல என் நெஞ்சினுள்ளே; மிக்க மழை பொழிந்த கற்பாறை யருகிலே பூத்த சிச்சிலிப் பறவையின் வாய் போன்ற அரும்புகளையுடைய முல்லையும் பரல்கள் நிரம்பிய பள்ளங்களும் உடைய (விளங்கிய) காடு சூழ்ந்த நாட்டையுடைய தலைமகனைக் கருதியிருப்போர்க்குக் கண்ணுறக்கமும் வாரா நிற்குமோ ? என்றேன் காண்;
தலைவன் வரவு உணர்ந்து, தலைவிக்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது. - சிறுமோலிகனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 61. குறிஞ்சி, இலக்கியங்கள், குறிஞ்சி, நற்றிணை, பொழிந்த, வாய், யான், மெல்ல, தோழி, எட்டுத்தொகை, சங்க, அன்னை