நற்றிணை - 388. நெய்தல்
அம்ம வாழி, தோழி!- நன்னுதற்கு யாங்கு ஆகின்றுகொல் பசப்பே- நோன் புரிக் கயிறு கடை யாத்த கடு நடை எறி உளித் திண் திமில் பரதவர் ஒண் சுடர்க் கொளீஇ, நடு நாள் வேட்டம் போகி, வைகறைக் |
5 |
கடல் மீன் தந்து, கானற் குவைஇ, ஓங்கு இரும் புன்னை வரி நிழல் இருந்து, தேம் கமழ் தேறல் கிளையொடு மாந்தி, பெரிய மகிழும் துறைவன் எம் சிறிய நெஞ்சத்து அகல்வு அறியானே? |
10 |
தோழி வாழ்வாயாக! யான் கூறுகின்ற இதனைக் கேள்; வன்மைமிக்க புரிகளான் முறுக்குண்ட கயிற்று நுனியிலே கட்டிய திமிங்கிலத்தின்மீது எறிகின்ற ஈட்டியையுடைய நீரில் விரைந்து செல்ல வல்ல திண்ணிய மீன்படகிலே செல்லுகின்ற பரதவர்; ஒள்ளிய விளக்குகளைக் கொளுத்திக்கொண்டு நடுயாமத்து வேட்டைமேற்சென்று; கடலிலே பிடித்த மீன்களை விடியற்காலையில் கொண்டுவந்து; கழிக்கரைச் சோலையின்கண்ணே குவித்து; உயர்ந்து கரிய புன்னை மரங்களின் வரியமைந்த நிழலிலிருந்து; தேன் மணம் வீசும் தௌ¤ந்த கள்ளை அருகிலே தம் உறவினருடன் கூடிப்பருகி; அளவில்லாது மிகவும் மகிழ்ந்து வைகும் கடலின் துறையையுடைய தலைமகன்; எமது சிறிய உள்ளத்தினின்று நீங்குதல் கற்றறிந்திலனாதலின் எப்பொழுதும் எம்முள்ளத்தூடே இராநின்றனன்; அங்ஙனம் அவன் எம்மைப் பிரியாது உறைதலானே எமது நல்ல நுதலின் கண்ணே பசலை எவ்வாறு உண்டாகாநிற்கும்; அதனை ஆராய்ந்து கூறிக் காண்!
வரைவு நீட ஆற்றாளாகிய தோழிக்குத் தலைமகன் சிறைப்புறமாகச் சொல்லியது;'மனையுள் வேறுபடாது ஆற்றினாய்' என்றாற்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 388. நெய்தல், இலக்கியங்கள், நெய்தல், நற்றிணை, சிறிய, தலைமகன், எமது, புன்னை, தோழி, எட்டுத்தொகை, சங்க, பரதவர்