நற்றிணை - 365. குறிஞ்சி

அருங் கடி அன்னை காவல் நீவி, பெருங் கடை இறந்து, மன்றம் போகி, பகலே, பலரும் காண, வாய் விட்டு அகல் வயற் படப்பை அவன் ஊர் வினவி, சென்மோ வாழி- தோழி!- பல் நாள் |
5 |
கருவி வானம் பெய்யாதுஆயினும், அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின் வான் தோய் மா மலைக் கிழவனை, 'சான்றோய் அல்லை' என்றனம் வரற்கே. |
தோழீ! வாழ்வாயாக! பல்நாள் கருவி வானம் பெய்யாது ஆயினும் அருவி ஆர்க்கும் அயம்திகழ் சிலம்பின் நெடுநாள் காறும் மின்னல் முதலாகிய தொகுதியையுடைய மேகம் மழை பெய்யா தொழிந்தாலும் அருவியொலி மாறாது பெருகி வருகின்ற நீர் விளங்கிய பக்கமலைகளையுடைய; ஆகாயத்தின் மீதுயர்ந்த பெரிய மலைநாடனை; நெருங்கி நின்னையடைந்த எம்மை நீ கைவிடுதலானே சால்புடையையல்லை என்று கூறினேமாகி மீண்டு வருதற்கு; அருமையாகிய காவலைச் செய்துடைய அன்னையினது காவல் கடந்து; பெரிய தலைக்கடை வாயிலையும் நீங்கி¢ ஊர்ப்பொதுவாகிய அம்பலத்தினை யடைந்து; பகற் பொழுதிலே பலருங் காணுமாறு யாங் கொண்டிருந்த நாணினை விடுத்து அகன்ற வயல் சூழ்ந்த கொல்லைகளையுடைய அவனது ஊர்; எவ்விடத்து உளதென்று வாயால் வினவியறிந்து சென்று வருவோமோ? ஒன்று கூறுவாயாக!
span class="color-blue">தோழி, தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்கு உரைப்பாளாய் இயற்பழித்து,'இன்னது செய்தும்' என்பாளாய்ச் சொல்லியது. - கிள்ளிமங்கலம் கிழார் மகனார் சேர கோவனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 365. குறிஞ்சி, இலக்கியங்கள், நற்றிணை, குறிஞ்சி, அருவி, ஆர்க்கும், சிலம்பின், பெரிய, வானம், தோழி, எட்டுத்தொகை, சங்க, காவல், கருவி