நற்றிணை - 325. பாலை
கவிதலை எண்கின் பரூஉ மயிர் ஏற்றை இரை தேர் வேட்கையின் இரவில் போகி, நீடு செயல் சிதலைத் தோடு புனைந்து எடுத்த அர வாழ் புற்றம் ஒழிய, ஒய்யென முர வாய் வள் உகிர் இடப்ப வாங்கும், |
5 |
ஊக்கு அருங் கவலை நீந்தி, மற்று- இவள் பூப்போல் உண்கண் புது நலம் சிதைய, வீங்கு நீர் வாரக் கண்டும், தகுமோ?- பெரும!- தவிர்க நும் செலவே. |
பெரும! இவளுடைய நீலமலர் போன்ற மையுண்ட கண்களின் புதிய அழகு சிதையும்படி மிக்க நீர் வடிதலைக் கண்டு வைத்தும்; கவிந்த தலையையும் பருத்த மயிரையுமுடைய ஆண்கரடி; தான் இரை தேடி உண்ணும் விருப்பத்தினால் இரவிலே சென்று; நீடிய செய்கையையுடைய கறையான் கூட்டம் செய்து உயர்த்திய பாம்புகள் வாழ்கின்ற புற்றில் உள்ள இச் சிதலை ஒருங்கே ஒழியும்படி ; விரைவாக ஒடிந்த வாயையுடைய பெரிய நகங்களாலே பறித்து உள்ளிருக்கும் குரும்பி முதலாயவற்றை உறிஞ்சி இழுக்காநின்ற உள்ளத்தால் நினைத்தற்குமரிய கவர்த்த சுர நெறியிலே; கடந்து நீயிர் செல்லத்தகுமோ?; (தகாது) ஆதலால் நீயிர் செல்லுவதைத் தவிர்ப்பீராக!;
தோழி செலவு அழுங்குவித்தது. - மதுரைக் காருலவியங் கூத்தனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 325. பாலை, இலக்கியங்கள், நற்றிணை, பாலை, நீயிர், பெரும, சங்க, எட்டுத்தொகை, நீர்