நற்றிணை - 32. குறிஞ்சி
'மாயோன் அன்ன மால் வரைக்கவாஅன், வாலியோன் அன்ன வயங்கு வெள் அருவி அம் மலைகிழவோன் நம் நயந்து என்றும் வருந்தினன்' என்பது ஓர் வாய்ச் சொல் தேறாய்; நீயும் கண்டு, நுமரொடும் எண்ணி, |
5 |
அறிவு அறிந்து அளவல் வேண்டும்; மறுதரற்கு அரிய- வாழி, தோழி!- பெரியோர் நாடி நட்பின் அல்லது, நட்டு நாடார், தம் ஒட்டியோர் திறத்தே. |
தோழீ ! வாழி ! மாயோனைப் போன்ற பெரிய மலைப்பக்கத்து அவன் கண்ணனாயவதரித்த பொழுது அவனுக்கு முன்னவனாகத் தோன்றிய வெளிய நிறத்தையுடைய பலதேவனைப் போன்ற விளங்கிய வெண்மையான அருவிகளையுடைய; அழகிய மலைக்குரிய தலைவன் நாள்தோறும் நம் புனத்து அயல் வந்து நம்மை விரும்பி வருந்தாநின்றான் என்று கூறுகின்ற எனது ஒப்பற்ற வாய்மொழியைத் தௌ¤ந்தாயல்லை; என்னோடு உசாவுவதை யொழித்து நீயும் அவனை நோக்கி நின்மாட்டு அன்புடைய தோழியரோடும் ஆராய்ந்து அறிவினால் இது தக்கது இது தகாததென்பதையும் அறிந்து பின்னர் அளவளாவுதல் வேண்டும்; அவன் கூற்று மறுத்தற்கரியன காண் !; அறிவுடைய சான்றோர் தம்பாலடைந்து நட்புக் கொள்ள விரும்பினார் திறத்து; முன்னர் அவருடைய குணம் செயல்களின் நன்மையை ஆராய்ந்து நட்புக்கொள்ளுவதல்லது நட்புச் செய்து பின்பு ஆராய்ந்து பாரார்; நீ அங்ஙன் ஆராய்ந்து மலைகிழவோனை நட்புக்கொண்டாயல்லை; முன்பு நட்டு இப்பொழுது வெறுத்தல் தகாது கண்டாய் !
தலைவிக்குக் குறை நயப்புக் கூறியது. - கபிலர்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 32. குறிஞ்சி, இலக்கியங்கள், ஆராய்ந்து, குறிஞ்சி, நற்றிணை, வாழி, அவன், வேண்டும், நட்டு, நீயும், எட்டுத்தொகை, சங்க, அன்ன, அறிந்து