நற்றிணை - 31. நெய்தல்
மா இரும் பரப்பகம் துணிய நோக்கி, சேயிறா எறிந்த சிறு வெண் காக்கை பாய் இரும் பனிக் கழி துழைஇ, பைங் கால் தான் வீழ் பெடைக்குப் பயிரிடூஉ, சுரக்கும் சிறு வீ ஞாழல் துறையுமார் இனிதே; |
5 |
பெரும் புலம்பு உற்ற நெஞ்சமொடு, பல நினைந்து, யானும் இனையேன்- ஆயின், ஆனாது வேறு பல் நாட்டில் கால் தர வந்த பல உறு பண்ணியம் இழிதரு நிலவுமணல் நெடுஞ் சினைப் புன்னைக் கடுஞ் சூல் வெண் குருகு |
10 |
உலவுத் திரை ஓதம் வெரூஉம் உரவு நீர்ச் சேர்ப்பனொடு மணவா ஊங்கே. |
தோழீ ! அமையாமல் வேறுவேறாகிய நாடுகளினின்றும் கலங்களைச் காற்றுச் செலுத்துதலாலே வந்திறுத்த பலவகைப் பண்டங்கள் இறக்கியிட்ட நிலாவை ஒத்த மணற் பரப்பின் கண்ணுள்ள, நெடுஞ்சினைப் புன்னைக் கடுஞ்சூல் வெண் குருகு நெடிய புன்னைக்கிளையிலிருக்கின்ற முதிர்ந்த சூலையுடைய வெளிய குருகு; உலாவுதலையுடைய அலையோசைக்கு வெருவா நிற்கும் வலிய நீர்ப்பரப்பினையுடைய கடற்சேர்ப்பனொடு மணவாத முன்பு; கரிய பெரிய நீர்பரந்த கழியிடந் தௌ¤தலானே அதனை நோக்கி: சேஇறா எறிந்த சிறு வெள் காக்கை அதிலுள்ள செய்ய இறாமீனைப் பற்றுதற்குப் பாய்ந்த கழுத்தளவு சிறிது வெண்மையுடைய நீர்க்காக்கை; பரவிய பெரிய குளிர்ச்சியையுடைய கழியிடத்தைத் துழாவியெடுத்துத் தான் விரும்பிய பசிய காலையுடைய பெடையை அழைத்து அதற்குக் கொடா நிற்கும்; சிறிய பூவையுடைய ஞாழலந்துறையும் இனிதேயாயிருந்தது; அவன் என்னைக் கலந்து கைவிட்ட பின்பு அத்துறையும் வெறுப்புடைத்தாயிற்று; ஆதலால் பெரிய வருத்தமுற்ற உள்ளத்தில் அவன் பிரிந்ததனால் ஆகிய துன்பம் பலவற்றையும் நினைந்து யானும் இத்தன்மையே னாயினென்காண்;
தலைவன்சிறைப்புறத்தானாக, தலைவி வன்புறை எதிர்அழிந்தது. - நக்கீரனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 31. நெய்தல், இலக்கியங்கள், நெய்தல், குருகு, பெரிய, சிறு, வெண், நற்றிணை, புன்னைக், யானும், எட்டுத்தொகை, நிற்கும், அவன், நினைந்து, தான், இரும், எறிந்த, சங்க, காக்கை, கால், நோக்கி