நற்றிணை - 309. குறிஞ்சி
நெகிழ்ந்த தோளும், வாடிய வரியும், தளிர் வனப்பு இழந்த என் நிறனும் நோக்கி, 'யான் செய்தன்று இவள் துயர்' என, அன்பின் ஆழல்; வாழி!- தோழி!- 'வாழைக் கொழு மடல் அகல் இலைத் தளி தலைக் கலாவும், |
5 |
பெரு மலை நாடன் கேண்மை நமக்கே விழுமமாக அறியுநர் இன்று' என, கூறுவைமன்னோ, நீயே; தேறுவன்மன் யான், அவருடை நட்பே. |
தோழீ! தளர்வடைந்த தோளையும் வாட்டமுற்ற இரேகையையும் மாந்தளிரின் தன்மை போன்ற அழகு இழந்த எனது நிறத்தையும் நோக்கி; 'என்னால் இவளுக்கு இத் துயர் செய்யப்பட்டது' என்று கூறி; என்பாலுள்ள அன்பின் மிகுதியினால் நீ அழாதே கொள்!; நெடுங்காலம் வாழ்வாயாக!; வாழையின் கொழுவிய மடலகன்ற கட்டைக் குருத்தாகிய இலையிலே தாற்றினுள்ள இனிய நீர் கலந்து தங்கியிருக்கும் பெரிய மலை நாடனுடைய நட்பானது; நமக்குத் துன்பமாயிருக்கவும் அதனை அறிபவர் இல்லையே என்று கூறாநிற்பை; ஐயோ! அவருடைய நட்பை நான் மிக நன்றாகத் தௌ¤ந்திருக்கின்றேனாதலால் ஆற்றியிருப்பேன் காண்!
'வரைவு நீட ஆற்றாள்' எனக் கவன்று தான் ஆற்றாளாகிய தோழியைத் தலைமகள் ஆற்றுவித்தது. - கபிலர்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 309. குறிஞ்சி, இலக்கியங்கள், நற்றிணை, குறிஞ்சி, துயர், அன்பின், யான், இழந்த, எட்டுத்தொகை, சங்க, நோக்கி