நற்றிணை - 303. நெய்தல்
ஒலி அவிந்து அடங்கி, யாமம்
நள்ளென, கலி கெழு பாக்கம் துயில் மடிந்தன்றே; தொன்று உறை கடவுள் சேர்ந்த பராரை மன்றப் பெண்ணை வாங்கு மடற் குடம்பைத் துணை புணர் அன்றில் உயவுக் குரல் கேட்டொறும், |
5 |
'துஞ்சாக் கண்ணள், துயர் அடச் சாஅய், நம்வயின் வருந்தும், நன்னுதல்' என்பது உண்டுகொல்?- வாழி, தோழி!- தெண் கடல் வன் கைப் பரதவர் இட்ட செங் கோல் கொடு முடி அவ் வலை பரியப் போக்கி, |
10 |
கடு முரண் எறி சுறா வழங்கும் நெடுநீர்ச் சேர்ப்பன்தன் நெஞ்சத்தானே. |
தோழீ! நெடுங்காலம் வாழ்வாயாக; ஊர் ஓசையவிந்து அடங்கி இரவு நடுயாம மாகலும்; கட்குடியின் செருக்கு அடங்கிப் பாக்கமும் துயிலா நின்றதே இப்பொழுது நம் காதலனை நினைந்து நாம் வருந்துதல் போல; தௌ¤ந்த கடலின்கண்ணே வலிய கையையுடைய பரதவ மாக்கள் மீன் பிடித்தற்கு நெடுக இட்ட சிவந்த நிறத்தையும் வலித்துக் கட்டிய முடியையும் உடைய அழகிய வலை; பீறுபடக் கிழித்துச் சென்று அச்சத்தைச் செய்யும் வலிமையுடைய தன் மருப்பினாற் கொல்ல வல்ல சுறாமீன் இயங்கா நிற்கும்; நீண்ட நீர்த்துறையுடைய தலைவனது உள்ளத்திலும்; பண்டு தொட்டு உறைகின்ற கடவுள் தங்கப்பெற்ற பருத்த அடியையுடைய ஊர்ப்பொதுவிலுள்ள பனையின் வளைந்த மடலிடத்துச் செய்த குடம்பையின் கண் இருந்து தன் பெடையைப் புணர்கின்ற மகன்றிலின்; வருத்தந்தரும் குரலைக் கேட்குந்தோறும்; நல்ல நுதலினையுடைய நம் காதலி கண் உறங்காது காமநோய் வருத்துதலானே; உடம்பு மெலிந்து நம்மீது வருத்தமடையாநிற்பள் என்பதும் உண்டாகுமோ? ஆராய்ந்து கூறாய்,
வேட்கை தாங்ககில்லாளாய்த் தோழிக்குத் தலைமகள் சொல்லியது;சிறைப்புறத்தான் என்பது மலிந்ததூஉம் ஆம். - மதுரை ஆருலவியநாட்டு ஆலம்பேரி சாத்தனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 303. நெய்தல், இலக்கியங்கள், நற்றிணை, நெய்தல், என்பது, இட்ட, கடவுள், அடங்கி, எட்டுத்தொகை, சங்க