நற்றிணை - 298. பாலை
வம்ப மாக்கள் வரு திறம் நோக்கி, செங் கணை தொடுத்த செயிர் நோக்கு ஆடவர் மடி வாய்த் தண்ணுமைத் தழங்கு குரல் கேட்ட எருவைச் சேவல் கிளைவயிற் பெயரும் அருஞ் சுரக் கவலை, அஞ்சுவரு நனந்தலைப் |
5 |
பெரும் பல் குன்றம் உள்ளியும், மற்று- இவள் கரும்புடைப் பணைத் தோள் நோக்கியும், ஒரு திறம் பற்றாய்- வாழி, எம் நெஞ்சே!- நல் தார்ப் பொற்றேர்ச் செழியன் கூடல் ஆங்கண், ஒருமை செப்பிய அருமை, வான் முகை |
10 |
இரும் போது கமழும் கூந்தல், பெரு மலை தழீஇயும், நோக்கு இயையுமோமற்றே? |
எமது நெஞ்சமே!; அயல் நாட்டு மாந்தர் நெறியில் வருகின்ற தன்மையை நோக்கி; அவரைக் கொள்ளை கொள்ளும்பொருட்டுச் சிவந்த அம்பைச் செலுத்திய சினத்தொடு நோக்குகின்ற மறவருடைய; தோலை மடித்துப் போர்த்த வாயையுடைய தண்ணுமையை முழக்கி எழுப்பும் ஓசையைக்கேட்ட பருந்தின் சேவல்; அச்சமுற்றுத் தன் சுற்றத்திடத்துச் செல்லாநிற்கும் சென்று சேர்தற்கரிய பாலைநிலத்தின்கணுள்ள கவர்த்த வழிகளையுடைய; கருதினவர்க்கு அச்சந்தோன்றுகின்ற அகன்ற இடத்தையுடைய பெரிய பலவாய குன்றுகளைப் பொருள்தேடும் விருப்பினாலே செல்ல நினைந்தும்; இவளுடைய கரும்பு எழுதப்பெற்ற பருத்த தோளைப் பிரிய வேண்டியிருத்தலினால் அதனுக்கஞ்சி¢ப் பலமுறை நோக்கியும்; நீ ஒரு நெறியைக் கடைப்பிடித்து ஒழுகுவாயல்லை; நல்ல மாலை அணிந்த பொன்னாலாகிய தேரையுடைய பாண்டியனது மதுரையம்பதியிலே; இவள் தோழி ஒருதன்மையாகப் பொருள்வயிற் செல்லும்படி உறுதிப்படுத்திக் கூறிய அருமையாகிய மொழியினால்; யாம் பெரிய மலைநெறியைத் தழுவிய பின்னும்; வெளிய அரும்பு மலர்ந்த பெரிய மலரின் மணம்வீசும் கூந்தலையுடையாளைப் பார்ப்பதற்கு இயையுமோ? இயையு மாயின் பொருள்வயிற் பிரிந்து சென்று காண்;
தோழியால் பொருள் வலிப்பித்துத் தலைமகளை எய்தி ஆற்றாதாய நெஞ்சினை நெருங் கிச் சொல்லி, தலைமகன் செலவு அழுங்கியது. - விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 298. பாலை, இலக்கியங்கள், பாலை, பெரிய, நற்றிணை, நோக்கியும், சென்று, பொருள்வயிற், இவள், நோக்கி, எட்டுத்தொகை, சங்க, திறம், நோக்கு, சேவல்