நற்றிணை - 286. பாலை
'ஊசல் ஒண் குழை உடை வாய்த்தன்ன, அத்தக் குமிழின் ஆய் இதழ் அலரி கல் அறை வரிக்கும் புல்லென் குன்றம் சென்றோர்மன்ற; செலீஇயர் என் உயிர்' என, புனை இழை நெகிழ விம்மி, நொந்து நொந்து |
5 |
இனைதல் ஆன்றிசின்- ஆயிழை!- நினையின் நட்டோர் ஆக்கம் வேண்டியும், ஒட்டிய நின் தோள் அணி பெற வரற்கும் அன்றோ- தோழி!- அவர் சென்ற திறமே? |
ஆராய்ந்தணிந்த இழையையுடையாய்! தோழீ, உடைமரங்கள் மிக்க நெறியின்கண்ணே மகளிரின் ஒள்ளிய குண்டலத்திற்கொளுவிய ஊசல் போன்ற மலை நெறியிலுள்ள குமிழ மரத்தின் அழகிய இதழையுடைய மலர் கல்லென்னும் ஒலியோடு கோலஞ்செய்தாற்போல உதிராநிற்கும்; பொலிவழிந்த குன்றத்து எங்காதலர் சென்றனர் ஆதலால் திண்ணமாக இனி என்னுயிர் சென்றொழிவதாக என்று; நீ அணிந்த கலன்கள் கழன்று விழும்படி விம்மியழுது மிகநொந்து வருந்துகின்றதனைச் சிறிது பொறுப்பாயாக!; கருதுங்காலைத் தம்மை நட்புக் கொண்டவர் தாம் செல்வமடைய வேண்டியதற்காகவும் அடைக்கலமாகப் புகுந்த நின்னுடைய தோள்கள் நல்ல கலன்களை அணியப் பெறுவதற்காகவும் அன்றோ; அவர் சென்ற தன்மையாகும்;
பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தது. - துறைக்குறுமாவிற் பாலங் கொற்றனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 286. பாலை, இலக்கியங்கள், பாலை, நற்றிணை, தோழி, அவர், சென்ற, அன்றோ, ஊசல், எட்டுத்தொகை, சங்க, நொந்து